More
Categories: Cinema News latest news

தனிக்காட்டு ராஜாக்கள்!..வாழ்க்கையை தொலைச்சு தனிமரமாக இருக்கும் நடிகர்கள்!..

திருமணம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதுவும் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மகிழ்ச்சியான சம்பவம் கூட. நம்முடைய சந்தோஷ, துக்கங்களை வாழ்நாள் முழுவதும் பகிர்ந்திட நமக்காக படைக்கப்பட்ட ஒரு விஷயம் தான் திருமண பந்தம். அந்த பந்தத்தில் வெற்றிப் பெற்றவர்களும் உண்டு. தோல்வி அடைந்தவர்களும் உண்டு. மேலும் தனியாக இருந்தும் தங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிலரும் இருக்கிறார்கள். அந்த வகையில் தனியாக இருந்து சந்தோஷத்தை அனுபவிக்கும் நடிகர்களின் பட்டியல் இதோ:

Advertising
Advertising

நடிகர் கமல் : உலக நாயகன் கமல் ஹாசன் முதலில் பரத நாட்டிய கலைஞரான வாணிகணபதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு அந்த வாழ்க்கை விவாகரத்தில் முடிய மீண்டும் இரண்டாவதாக நடிகை ஷாரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்த திருமண பந்தமும் விவாகரத்தில் முடிய இப்போது தனியாக வாழ்க்கையை தன் மகள்களுடன் கழித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

நடிகர் பிரசாந்த் : 90களில் சாக்லேட் பாயாக பெண்களின் மனதில் வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் கிரஹலட்சுமி என்ற பெண்ணை இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் இவர்கள் வாழ்க்கையும் தொடராமல் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்றார். தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரசாந்த் தனிமையான வாழ்க்கையை கழித்து வருகிறார்.

நடிகர் பார்த்திபன் : நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தன்னுடன் நிறைய படங்களில் ஜோடியாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அதன் பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் சுயமாக சிந்தித்து பேசி விவாகரத்து தான் முடிவு என்ற நிலைமைக்கு வந்தனர். விவாகரத்துக்கு பிறகு பார்த்திபன் படங்களில் நடிப்பது இயக்குவது என படு பிஸியாக இருக்கிறார்.

நடிகர் ராமராஜன்: கிராமத்து நாயகன் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் ராமராஜன் சக நடிகையான நளினியை 1987ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்கள் இரட்டையர்களை குழந்தைகளாக பெற்றனர். ஆனால் இருவருக்கும் ஒத்துப் போகாததால் பிரிந்து விட்டனர். அதன் பின் ராமராஜன் படங்களின் மீதும் நடிப்பின் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்.

Published by
Rohini