தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக விருதுகள் வழங்கப்படவில்லை. திடீரென கடந்த ஆண்டு 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது 2015ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான விருது அறிவிப்பை தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஹேண்ட் பேக்கில் இவ்ளோ ஐட்டமா? கிரண் காட்டியதும் ஷாக்கான நிருபர்.. இதெல்லாமா காட்டுவீங்க?
2015ம் ஆண்டு வெளியான படங்களில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனி ஒருவன் படத்துக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜன் இயக்கத்தில் வெளியான பசங்க படத்துக்கு 2வது பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபா எனும் படம் 3வது பரிசு பெறத் தேர்வாகி உள்ளது. மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் சிறப்பு பரிசுக்கு தேர்வாகி இருக்கிறது.
இதையும் படிங்க: கலியுகத்தில் ஒரு ராமராம்!.. விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி டீசர் ஒருவழியா ரிலீஸ்!.. படம் ஓடுமா?..
ஜோதிகா திருமணத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய 36 வயதினிலே படம் பெண்களை சிறப்பாக சித்தரித்த படம் என்கிற பரிசை வெல்லப் போகிறது.
கூடிய விரைவில் அரசு விழாவில் இந்த படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், 2016 முதல் 2023ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு எப்போது விருது கொடுப்பீங்க என்றும் தேசிய விருதுகளே ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து விடுகின்றனர். மாநில அரசு விருதுகள் இவ்வளவு தாமதம் செய்வதால் அந்த விருதையே பலரும் மறந்து விட்டார்கள் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…