Biggboss Season 8: ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகள் வருகிறதோ இல்லையோ இந்த வாரம் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறார் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்கள் மனதில் எழுந்து விடும். அந்தளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததும் இதை பற்றிய ஒரு க்யூரியாசிட்டி ஆரம்பித்துவிடும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது நடந்து வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடந்து வரும் வேளையில் இந்த வாரம் மட்டும் சிங்கிள் எவிக்ஷன் நடக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்பதை பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் குறைவான வாக்குகளின் அடிப்படையில் ரயான் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் லிஸ்ட்டில் இருப்பதாக தெரிகிறது.
இதில் ரயானுக்கு ப்ரீ பாஸ் இருந்தும் நேற்று முத்துக்குமரன் செய்த வேலையால் பிக்பாஸ் அந்த ப்ரீ பாஸை ரத்து செய்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் அன் அஃபிசியல் வாக்குகளின் அடிப்படையில் பவித்ராவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். ஆகையால் எவிக்ஷன் லிஸ்டில் ரயான், ரஞ்சித், பவித்ரா ஆகியோர் இருக்க ரஞ்சித் வெளியேற வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த வாரம் விஜய்சேதுபதிக்கு சரியான வேட்டை கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. அந்தளவுக்கு உள்ளே போட்டியாளர்கள் இந்த வாரம் கண்டெண்டுகளை வாரி வழங்கியிருக்கிறார்கள். ராணவ் கை உடைந்ததில் இருந்து நேற்று முத்துக்குமரன் பவித்ராவுக்காக விட்டுக்கொடுத்தது வரையிலும் விஜய்சேதுபதி யாரை என்ன கேட்கப் போகிறார்? அல்லது யாருக்காக பரிந்து பேசப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய்சேதுபதிக்கு சரியான வேட்டை என்றாலும் பார்க்கும் ரசிகர்களுக்கும் இது ஒரு வகையில் கண்டெண்ட் கிடைத்ததை போலத்தான் அமைந்திருக்கிறது. ஏனெனில் ரசிகர்கள் மனதில் நினைத்ததை விஜய் சேதுபதி இன்று செய்து விட்டால் விஜய்சேதுபதி தப்பித்தார். இல்லையென்றால் சிக்கினார் விஜய்சேதுபதி என்பது போல் மாறிவிடும். அதனால் இந்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read: சீண்டி பாருங்க! ரியாக்ஷன் இனி இப்படித்தான் இருக்கும்.. வெளியான விக்கி-நயன் வீடியோ
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…