ஏன்டா படம் முழுக்க ஹீரோ மட்டும்தானா?!.. டென் ஹவர்ஸை விளாசிய புளூசட்டை!

ten hours bluesatta
சிபிராஜ் நடிப்பில் நேற்று டென் ஹவர்ஸ் ரிலீஸ் ஆனது. இது ஒரு கிரைம் திரில்லர் மூவி. இளையராஜா கலியப்பெருமாள் இயக்கியுள்ளார். படத்தின் விமர்சனத்தை புளூசட்டைமாறன் இப்படி சொல்கிறார்.
டென் ஹவர்ஸ் இந்தப் படத்தோட கதையைப் பத்திப் பார்த்தா பொழுது விடிஞ்சா எலெக்ஷன் ரிசல்ட் வரப்போற நாள். சேலம் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பா இருக்கு. ஒரு பொண்ணு காணோம்னு புகார் வருது. அங்குள்ள இன்ஸ்பெக்டர் தான் சிபிராஜ். அவர் பொண்ணைக் கண்டுபிடிக்கப் போறாரு.
அந்த நேரத்துல ஒரு ஆம்னி பஸ்ல பொண்ணை யாரோ அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னு ஒரு மர்மமான போன் அவருக்கு வருது. அங்க போயி பார்த்தா அங்க ஒரு இளைஞரைக் கொலை பண்ணிருக்காங்க. இந்தக் கொலையைப் பண்ணினது யாரு? அந்தப் பொண்ணு காணாமப் போனதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு? அப்படிங்கறதுதான் படத்தோட கதை. 10மணி நேரத்துக்குள்ள நடக்குற கதையாகத் தான் பண்ணிருக்காங்க.

கதை நல்ல கதைதான். ஆனா அதைத் திரைக்கதையாக்கிய விதமோ, படமாக்குன விதத்துலயோ கோட்டை விட்டுட்டாங்க. அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி கதையை வளைச்சி வளைச்சி எடுத்துருக்காங்க. மறுநாள் எலெக்ஷன் ரிசல்ட். எவ்ளோ ஹையர் ஆபீசர்ஸ் வருவாங்க. 3 போலீஸ்காரனை வேற கொலை பண்ணிடுறாங்க.
எவ்வளவு பதற்றம் இருக்கும். அதை எல்லாம் காட்டாம ஹீரோ மேல கவனம் இல்லாமப் போயிடும்னு ஹீரோ ஒருத்தரையே காட்டுறாங்க. தமிழ்சினிமா ஹீரோவுக்கு ஒரு வழக்கம் இருக்கு. கல்யாண வீடுன்னா அவருதான் மாப்பிள்ளை. இழவு வீடுன்னா அவருதான் பொணம்.
அந்த மாதிரிதான் இந்தப் படத்தையும் பண்ணி வச்சிருக்காங்க. அதனால கதையில இயல்புத்தன்மை இல்லை. ஓடுற பஸ்ல கொலை நடந்துருக்கு. அப்படின்னா பஸ்ல உள்ள யாராவது ஒருத்தர்தான் பண்ணிருக்கணும். பஸ்ல இருந்து மொத்த பேரையும் வாரிப்போட்டு விசாரிக்கிறாங்க.
அது விசாரணை மாதிரியே இல்லை. நல்ல ஸ்கோர் பண்ற இடம். அதுல கோட்டை விட்டுட்டாங்க. படத்துல கொலையை எவன் பண்ணினா என்னன்னுதான் நமக்குத் தோணுது. அதுல ஒரு டுவிஸ்ட் பரபரப்பு எதுவுமே இல்லை. ரொம்ப ரொம்ப சுமாராப் போச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.