
நேற்று சரத்குமார் நடித்த ஆழி, ராதிகா நடித்த தாய்கிழவி மற்றும் 4த் புளோர் என மூன்று முக்கிய படங்கள் வெளியாகின.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தாய்கிழவி படம் நேற்று வெளியானது. படத்தின் முதல் ப்ரமோ வெளியானபோதே படம் நிச்சயம் வெற்றி என்று கணிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில தனங்களாகவே சோசியல் மீடியாவில் தாய்கிழவியை கொண்டாடி தீர்த்தார்கள். இந்த படத்துடம் சரத்குமார் நடித்த ஆழி படமும் வெளியானது. இப்படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் இன்று வெளியாகி உள்ளது.
அதன்படி தாய்கிழவி முதல் நாளில் ரூ.2.4 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆழி ரூ.4 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. இப்படத்துடன் வெளியான 4த் புளோர் ரூ 4 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com
