More
Categories: Cinema History Cinema News latest news

தளபதி படத்தில் க்ளைமேக்ஸை சொதப்பிய மணிரத்னம்… இப்படி இருந்தா வேற லெவல்.. இயக்குனர் சொன்ன சர்ப்ரைஸ்..!

Thalapathy: ரஜினியின் மெகா ஹிட் படத்தில் ஒன்று தான் தளபதி. இப்படத்தின் க்ளைமேஸ்கில் ஒரு சொதப்பல் ஆகி இருப்பதாக இயக்குனர் பாக்கியராஜ் சொன்ன ஒரு தகவலால் ரஜினியே மிரண்டு விட்டாராம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

பாக்கியராஜ் அளித்த பேட்டியில் இருந்து, நான் தளபதி படம் பார்த்து கொண்டு இருந்தேன். ரஜினி ஆரம்பத்தில் இருந்தே நட்புக்காக உயிரை கொடுப்பேன் என்ற அளவுக்கு சொல்லி இருப்பார். ஆனால் க்ளைமேக்ஸில் அரவிந்த் சாமியை கொல்ல சொல்லுவார் மம்முட்டி.

இதையும் வாசிங்க:சிவாஜியை பார்க்கும் ஆர்வத்தில் விழுந்தடிச்சு ஓடிய வடிவேலு! நடந்த சம்பவமே வேற – நடிகர் திலகம்னா சும்மாவா?

ஆனால் ரஜினி யோசித்து கொண்டே இருப்பார். ஏன் என அவர் கேட்கும் போது அவன் என் தம்பி. இதை மட்டும் வேண்டாம். வேற என்னவேணா சொல்லு கேட்கிறேன் என்பார். இதை பார்த்த போது எனக்கே ரொம்ப ஷாக்காக இருந்தது. மணிரத்னம் இதை எப்படி மறந்தார் என்று.

மம்முட்டிக்காக உயிரை கொடுக்க நினைக்கும் ரஜினி இந்த விஷயத்தினை கேட்ட உடன் சிரித்து கொண்டே துப்பாக்கியை கேட்டு வாங்கி கொண்டு அந்த இடத்தினை விட்டு கிளம்பி இருக்க வேண்டும். அப்போது மம்முட்டியின் கையால் யாரும் ரஜினியை காண வரணும்.

அவர்களிடம் அந்த கலெக்டரை கொல்ல சொல்லிவிட்டதாக கூறும் போது அதுக்கு எப்படி அவன் ஒத்துக்கிட்டான். அவன் தம்பியாச்சே எனக் கேட்கணும். கடைசியில் மம்முட்டி எனக்காக உயிரை கொடுக்க நினைச்ச என் தளபதியை அவன் குடும்பத்துடன் சேர்க்க அவரே கிளம்ப வேண்டும்.

இதையும் வாசிங்க:ரஜினிக்காக விஜய் அப்படி பேசலயாம்… பின்னாடி இருக்கும் சூட்சமம் என்னனு தெரியுமா?…

அந்த நேரத்தில் மம்முட்டியின் எதிரி வந்து சண்டை போட்டு இருந்தால் பார்ப்பதற்கு த்ரில்லிங்காக இருந்து இருக்கும். என்ன ஆகுமோ என்ற ஆவல் வந்திருக்கும் எனக் கூறினார். மேலும் இந்த விஷயத்தினை ரொம்ப நாட்கள் கழித்து ரஜினியிடம் கூறினாராம்.

அவரே சற்று நிமிடத்தில் ஓடி வந்து இவரை கட்டிக்கொண்டு எப்படி சார் இப்படி? என ஆச்சரியப்பட்டு இருக்கிறார். படம் பார்க்கும் போது இந்த யோசனை வந்தது. இப்படி ஒரு க்ளைமேக்ஸ் இருந்து இருந்தால் படமே வேற லெவலில் இருந்து இருக்கும் எனவும் குறிப்பிட்டாராம்.

Published by
Akhilan

Recent Posts