தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் அஜித்குமார். இவர் கடைசியாக இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான ”துணிவு” திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படத்துப் பிறகு அஜித் குமார் தனது அடுத்த திரைப்படத்திற்கு தயாராகிக் கொண்டு வருகிறார். இது இவரின் 62 வது திரைப்படமாகும். இப்படத்திற்கு அடுத்தடுத்த திருப்பங்கள் நிறைந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்படம் உருவாவதாக இருந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டது.
இப்படத்திற்கு மகிழ் திருமேனி இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ”தடையற தாக்க”,”மீகாமன்”, ”தடம்” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தனது திரைப்படங்களில் தெளிவான திரைக்கதை அமைத்து படத்தின் வீரியத்தை கூட்டுபவர். இயக்குனர் மட்டுமின்றி நடிகராக ”டெடி” திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டு வெளியான ”இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்பிற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இப்படி பல்வேறு துறைகளில் தனது தனிதிறமையின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மகிழ் திருமேனி.
இவர் தற்போது ஏ.கே 62 படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வருகிறார். இப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் இசையமைப்பதாக இருந்தது தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் ”நேர் கொண்ட பார்வை”,”வலிமை”,”துணிவு” திரைப்படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் நிரோவ் ஷா இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் இதற்கு முன்னர் ”என்னை அறிந்தால்” திரைப்படத்தில் விக்டராக வந்து மிரட்டி எடுத்த ”அருண் விஜய்” இப்படத்தில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகயுள்ளார் என்றும் மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் கதாநாயகனாக ”அருள்நிதி” நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என்றும் படம் தீபாவளிக்கு திரையரங்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…