Cinema News
நிறம் கருப்புதான்! ஆனா நடிப்புல நெருப்பு – சினிமாவில் சாதித்து காட்டிய நடிகைகள்..
சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிகராக வேண்டுமென்றால் அழகான தோற்றம், கட்டுமஸ்தான உடல்வாகு, நடிகைகளை பொறுத்தவரைக்கும் நல்ல நிறம் என்று தான் நிலைமை இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக அந்த நிலைமை மாறிவருகிறது. இருந்தாலும் 80களில் இருந்தே இது முற்றிலும் மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில் இப்போது சாதனை படைத்திருக்கும் பல நடிகைகள் பெரும்பாலும் கருமையான நிறத்துடன் வந்து சினிமாவில் நடிக்க வந்தவர்கள். அவர்கள் யார் என்பதை தான் பார்க்க இருக்கிறோம்.
நடிகை ராதிகா : தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் முதன் முதலில் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர்தான் ராதிகா. யாரை ஹீரோயினாக போடலாம் என்று தேடிக் கொண்டிருக்கையில் பாரதிராஜாவிடம் சிக்கியவர்தான் ராதிகா. பெரும்பாலும் பாரதிராஜா அவருடைய படத்தில் நல்ல அழகுள்ள பெண்களை நடிக்க வைக்கமாட்டார். எதார்த்தமாக இருக்கும் நடிகைகளைத்தான் பயன்படுத்துவார். அப்படி தேடிக் கொண்டிருக்கும் போதுதான் ராதிகா மாட்டினார். முதலில் ராதிகா பார்ப்பதற்கு கொழு கொழு உடம்புடன் பூசணிக்காய் போல கரு கருவென இருந்ததாக பாரதிராஜாவே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஆனால் இன்று அவர் படைத்திருக்கும் சாதனை அளப்பறியாதது.
நடிகை ரோஜா : புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களை எடுத்து இப்பொழுதுள்ள லோகேஷ் மாதிரி மிகவும் டிரெண்டிங்கில் இருந்தவர் இயக்குனர் செல்வமணி. அந்த சமயத்தில் தான் செம்பருத்தி படத்திற்காக நடிகையை தேடிக் கொண்டிருந்தார் செல்வமணி. அப்போது அவருக்கு தெரிந்தவர் ஒரு வீட்டிற்கு சென்றிருக்கையில் ஒரு கல்யாண ஆல்பத்தை பார்த்தாராம். அந்த ஆல்பத்தில் ரோஜா தெரிந்திருக்கிறார். முதலில் ரோஜாவும் கருப்பாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் ஒரு மீனவப்பெண் கதாபாத்திரம் என்பதால் ரோஜா பொருத்தமாக இருப்பார் என்று செல்வமணி அந்த இடத்திலேயே புக் பண்ணிவிட்டாராம். ஆனால் இப்போது ரோஜா அடைந்துள்ள இடம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
நடிகை கேப்ரியல்லா : சின்னத்திரை நடிகையான கேப்ரியல்லா சுந்தரி என்ற ஒரே சீரியல் தான். சன் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் லீடு ரோலில் நடித்த கேப்ரியல்லா கருப்பான நிறம் கொண்டவர்தான். ஆரம்பத்தில் விஜய் டிவியில் காமெடி ஷோ மூலம் மக்கள் மத்தியில் பரீட்சையமானார். ஆனால் அதன் மூலம் கேப்ரியல்லாவால் சாதிக்க முடியவில்லை. அதன் பிறகே சுந்தரி சீரியலில் இணைந்தார். இந்த சீரியலின் ரீச் இவரை எங்கேயோ கொண்டு சென்றது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் சினிமாவிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க : கடைசி காலத்தில் நேரில் வரவழைத்து அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர்!.. நெகிழ்ந்து போன கமல்ஹாசன்!..
ஐஸ்வர்யா ராஜேஷ் : தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நயன், த்ரிஷா இவர்களை போல் ஒரு க்ரேஸ் இல்லாவிட்டாலும் இவருக்கென்று சினிமாவில் ஒரு தனி இடமே இருக்கிறது என்று சொல்லலாம். இவர் பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் யாவும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த கதாபாத்திரங்களாகவே அமைந்திருக்கும். பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதைகளில் ஐஸ்வர்யாவின் பங்கு அதிகமாகவே இருக்கும். ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய எதார்த்தமான நடிகைதான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரும் நிறத்தில் கருப்பு என்றாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நடிப்பிற்காகவே ஐஸ்வர்யாவை தமிழ் சினிமா விடவில்லை.
நடிகை சரிதா : சரிதா நடிப்பு இளவரசி என்றே கூறலாம். சில நடிகைகள் தன்னுடைய கருமையான நிறம் தெரியக்கூடாது என்பதற்காக முழுவதும் மேக்கப் போட்டு நடிப்பார்கள். ஆனால் சரிதா நடித்த படங்களை பார்த்தால் அதில் அந்த அளவுக்கு மேக்கப்பே இருக்காது. தன்னுடைய ஒரிஜினாலிட்டியை காட்டியவாறே நடித்திருப்பார். உண்மையிலேயே இப்படி ஒரு நடிகையை யாரும் பார்த்திருக்க முடியாது. ஒவ்வொரு படங்களிலும் இவரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்திருக்கும். ரஜினி, பாக்யராஜ், சிவாஜி போன்ற பல நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் சரிதா.