நாகர்ஜூனா சொல்லியும் கேட்காத தனுஷ்! ‘குபேரன்’ படக்குழுவை திணற வைக்கும் நம்ம அசுரன்

Dhanush : தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என அடுத்தடுத்து தனது வளர்ச்சியை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். இந்திய அளவில் ஒரு பெருமை மிகு நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.

தற்போது தனுஷ் அவருடைய 51வது படமான ‘குபேரன்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தயாராகி வரும் இந்த குபேரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர் நாகார்ஜுனாவும் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா எங்கிட்ட கடைசியா பேசுன வார்த்தை அதுதான்… நெஞ்சைத் தொட்டுட்டாரே பி.வாசு..!

படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.ஆந்திரா மற்றும் சில சுற்றுவட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன .படத்தில் நாகார்ஜுனாவும் தனுஷும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகின்றார்களாம். சென்டிமென்ட் காட்சிகளில் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற வகையில் இருவரின் நடிப்பும் ஒட்டுமொத்த பட குழுவையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மும்பையில் மிகவும் துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு ஏரியாவில் படப்பிடிப்பு நடந்ததாம். அந்த ஏரியாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் நடிகர் தனுஷ் மாஸ்க் போடாமலும் கையுறை பயன்படுத்தாமலும் அந்த காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது. நாகார்ஜுனா சொல்லியும் கேட்காத தனுஷ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான ரிஸ்கில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: சாய் பல்லவி பர்த்டே!.. அந்த பட அப்டேட் வருமா?.. எதிர்பார்ப்புகளை எகிற விடும் ரசிகர்கள்!..

நடிப்பில் ஒரு அசுரத்தனத்தை வெளிப்படுத்தக்கூடிய தனுஷ் எதார்த்தமாக நடிக்க தான் எந்த எல்லைக்கும் போவேன் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த சம்பவம் இன்று திரையுலகில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

Related Articles

Next Story