இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி?; மரணத்தில் உள்ள மர்மம்!.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்...

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் பல மர்மங்கள் உள்ளது என்று பல அதிர்ச்சி தகவல்களை டாக்டர் கந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த கால லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என எல்லா மொழிகளிலும் நடித்து கொடி கட்டி பறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார்.

sridevi

தமிழில் 70திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மொத்தமாக 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018ம் ஆண்டு காலமானார். இவரது மறைவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் இறந்துவிட்டார் என செய்திகள் வெளியானது.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இது குறித்து அரசியல் விமர்சகர் கந்தராஜ் கூறுகையில், குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறுவதை யாராவது நம்புவார்களா? அது அப்பட்டமான பொய். போனி கபூர் ஸ்ரீதேவியை பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார்.

sridevi

இருவருக்கும் வயது வித்யாசமும் அதிகம், போனி கபூருக்கு அப்போதே பெரிய மகன் இருந்தார். கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கும், அவரது மூத்த மகனுக்கும் ஒரே வயது என்றே கூறலாம். ஸ்ரீதேவி மரணத்தில் நிச்சயமாக பல மர்மங்கள் உள்ளது. ஸ்ரீதேவி திருமணத்திற்கு காரணமே அவரின் பணம் தான், அதே போல அவரின் மரணத்திற்கு காரணமும் பணம் தான்.

sridevi

மேலும் ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடிக்கு இன்சூரன்ஸ் இருந்ததாக பல தகவல்கள் வெளியானது என்றும், போனி கபூர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், அதனால் தான் அவர் தப்பித்து விட்டார் என்றும் டாக்டர் கந்தராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- விஷால் என்ன இப்படி மாறிட்டாரு?.. ஹீரோயினை விட்டுட்டு அந்த நடிகரைத் தான் சைட் அடிப்பாராம்!

 

Related Articles

Next Story