பெத்த சம்பளமோ?… தனுஷ் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் இவர் தானாம்… உஷாரு தான் நீங்க…

Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் இவர் ஒரு பிளானில் தான் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வந்த போது அவருக்கு பெரிய ஆதரவு இல்லை. ஆனால் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையால் கொடிக்கட்டி பறந்தார். நடித்துக்கொண்டு இருந்தவர் ப.பாண்டி படத்தினை இயக்கி ஹிட்டடித்தார். இயக்கத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் தொடர்ச்சியாக நடிக்க மட்டுமே செய்து வந்தார்.

இதையும் படிங்க: அந்த நடிகை மீது ஆனந்தராஜுக்கு இருந்த ஒன் சைட் லவ்!.. வில்லன் நடிகரின் லவ் ஸ்டோரி தெரியுமா?…

ஹாலிவுட் வரை சென்று கோலிவுட் திரும்பி இருக்கும் தனுஷ். பல வருட இடைவேளைக்கு பின்னர் தற்போது ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இரு படங்களை இயக்கிவருகிறார். இப்படங்களின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனுஷ் தற்போது குபேரன் படத்தில் நடிக்கிறார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜூனாவும் இணைந்து நடிக்கின்றனர். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மும்பை தாராவியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இக்கதை பிச்சைக்காரராக இருக்கும் ஒருவர் மாபியாவாக உருவெடுக்கும் கதையாக அமைக்கப்பட்டு வருகிறதாம். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க: முத்துவை நம்ப மறுக்கும் குடும்பம்… கோபத்தில் அண்ணாமலை… என்னங்கப்பா கதை இது… எரிச்சலில் ரசிகர்கள்…

இந்நிலையில் இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தினையும் தெலுங்கு இயக்குனரே இயக்க இருக்கின்றாராம். பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறதாம்.

ஸ்ரீகாரம் படத்தினை இயக்கிய கிஷோர் ரெட்டி தான் இப்படத்தினை இயக்க இருக்கிறாராம். நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. வாரிசு படத்தினை இயக்கிய தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தினை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story