கமல் கேட்ட அந்தக் கேள்வி... ராமானுஜம் சொன்ன பதில்... பாலுமகேந்திரா எடுத்த முயற்சி

 
கமல் கேட்ட அந்தக் கேள்வி... ராமானுஜம் சொன்ன பதில்... பாலுமகேந்திரா எடுத்த முயற்சி
திரையுலகின் தந்தை டி.ராமானுஜம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பாரதிராஜா, கமல், பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி உள்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கலந்து கொண்ட சித்ரா லட்சுமணன், கமல் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். டி.ஆர்.சாரைப் பொருத்தவரை என் மனதுக்கு நெருக்கமானவர். என் மேல மிகப்பெரிய பாசம் கொண்டவர் என்கிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். இந்த விழாவில் அவர் பேசியது இதுதான். எனது திரைப்படத்தின் 100வது நாள் விழா எந்த விழாவாக இருந்தாலும் அவர் தான் தலைவர். கமலின் பிறந்த நாள் விழாவும், சூரசம்ஹாரம் படத்தின் 100வது நாள் விழாவும் 7.11.1988ல் கலைவாணர் அரங்கில் நடந்தது. இதையும் படிங்க... இனிமே அவர் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது… திடீரென விஜயகாந்துக்காக பேசிய சூப்பர்ஸ்டார்… அந்த விழாவுக்குத் தலைமை தாங்கியவர் டிஆர் தான். அதே போல நானும் சகோதரரும் இணைந்து தயாரித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் 100வது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அந்த விழாவிற்குத் தலைமை தாங்கியவரும் டிஆர் தான். சினிமா உலகில் எப்போது எந்தப் பிரச்சனைகள் என்றாலும் அதைக் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் அணுகினார். எல்லா பிரச்சனைகளையும் உடனுக்குடன் அப்போது முதல் அமைச்சர் எம்ஜிஆர் ஆனாலும், ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி. உடனடியாகத் தொடர்பு கொண்டு தீர்த்து வைத்து விடுவார்’ என அவர் தெரிவித்துள்ளார். கமல் கேட்ட அந்தக் கேள்வி... ராமானுஜம் சொன்ன பதில்... பாலுமகேந்திரா எடுத்த முயற்சி DR1 முதலில் கமல் சினிமாவுக்குள் நுழையும்போது டெக்னீசியனாக ஆவதுதான் கௌரவம் என நினைத்தாராம். நடிக்க வரவில்லை என்றார். அதன்பிறகு ஒரு சில வேடங்கள் கிடைத்தது. நடித்தேன் என்றார். என்றாலும் பாலுமகேந்திரா முதல் படம் எடுக்கப் போகிறார் என்றார் கமல். அவர் மலையாளத்தில் எடுத்த படங்களின் பிரேம் எல்லாம் தியேட்டரில் மாறிப் போயிடும். சண்டை போடறதுக்காக டிஆர். அவர்களைப் போய்ப் பார்ப்பேன். சார் என்ன இது.. பிரமாதமா இன்டர்நேஷனல் லெவல்ல பிரேமிங் வச்சிருக்காரு. அதெல்லாம் மாறிப்போயிட்டு.. ஒவ்வொரு தியேட்டர்லயும் ஒவ்வொரு மாதிரி புரொஜெக்ஷன் பண்றாங்கன்னு டிஆர் அவர்களிடம் கேட்பேன். அதுக்குத் தான் நாங்க எல்லாரும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுக்குக் கொஞ்சம் டைம் ஆகும் என்றார். அதை நான் பாலுமகேந்திராவிடம் சொன்னேன். அதற்கு அவர் என்ன பண்ணினார்னா அவர் தனியாக ஒரு பிரேமைத் தயார் செய்தார். அதை எந்தத் தியேட்டரில் போட்டாலும் மாறாது. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

From Around the web