Connect with us

Cinema News

அடேங்கப்பா!.. லலித் வண்டவாளம் தண்டவாளம் ஏறப்போகுது?.. திருப்பூர் சுப்பிரமணியம் சவுக்கடி!..

எந்த எந்த தியேட்டர்ல என்ன விலைக்கு லியோ படத்துக்கான டிக்கெட் விற்கணும், எப்படி தொழில் பண்ணனும் என்றெல்லாம் லலித் குமார் எங்களுக்கே சொல்லிக் கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் அடுத்து அடுத்து வெளியிடப் போறேன் என திருப்பூர் சுப்பிரமணியம் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரை ஒட்டுமொத்தமாக வச்சு செய்துள்ளார்.

லலித் குமார் தன்னிடம் பணம் வாங்கித்தான் லியோ படத்தையே எடுத்தார் என அம்பலப்படுத்தி உள்ள திருப்பூர் சுப்பிரமணியன் லலித் என்ன மாதிரியான ஆளு? எப்படி சினிமாவுக்குள் வந்தார்.. மாஸ்டர் பட சமயத்தில் நடந்த தில்லு முல்லு என அனைத்தையும் அம்பலப்படுத்தப் போவதாக பயமுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: கௌதம் மேனன் எப்படி சார்… யோஹன் திரைப்படம் நடக்காமல் போனதுக்கு இது தான் காரணமா..?

சினிமாவில் பின்னணியில் நடக்கும் டீலிங்கை எல்லாம் தன்னை பற்றி லலித் குமார் அவதூறாக பேசிய நிலையில், அப்செட்டான திருப்பூர் சுப்பிரமணியம் ஒவ்வொன்றாக வெளியிட்டு லலித் குமாரின் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்ற போகிறார் என ரஜினி ரசிகர்கள் திருப்பூர் சுப்பிரமணியத்தின் பேட்டியை தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மாஸ்டர் படத்துக்கு 350 ரூபாய்க்கு தான் டிக்கெட் விற்க காரணமே லலித் குமார் தான் என்கிற பெரிய குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன்.

இதையும் படிங்க: இது சரியில்லை.. ரிலீஸுக்கு முன்னரே கணித்த விஜய்.. ஸ்லிப் ஆகிய லோகேஷ் கணக்கு..! பேச்ச கேட்ருக்கலாம்..!

லியோ படம் தனது தியேட்டரில் இதுவரை 82 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் என திருப்பூர் சுப்பிரமணியன் சொல்லி உள்ள நிலையில், லியோ படம் லாபமே இல்லை என திருப்பூர் சுப்பிரமணியத்தை பேச யார் பின்னாடி இருந்து இயக்கியது என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய்யின் பினாமி தான் லலித் குமார் என்று சொன்னதெல்லாம் பொய் என்பதை திருப்பூர் சுப்பிரமணியமே அம்பலப்படுத்தி உள்ளார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top