Connect with us

Cinema News

பாக்கியலட்சுமி: எனக்கு தான் வேணும்… தொடர்ந்து அடம் பிடிக்கும் கணேஷ் மற்றும் மாலினி…!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அம்ருதா, எழில் இருவரும் இருக்கும் புகைப்படத்தினை பார்த்த கணேஷ் அதிர்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் பாக்கியா கணேஷை பார்த்து விடுகிறார். யாருப்பா நீ. உனக்கு என்ன வேணும்?

எழில் ஃப்ரண்டா அவனை கூப்பிடவா எனக் கேட்கிறார். ஆனால் பாக்கியாவிடம் சமாளித்து விட்டு கணேஷ் பீச்சுக்கு சென்று அம்ருதாவை நினைத்து அழுதுக்கொண்டு இருக்கிறார். அப்போது அவர் அம்மா, அப்பா கால் செய்ய அம்ருதாவுக்கு நீங்க தான் கல்யாணம் செஞ்சு வச்சீங்க. ஏன் இப்டி செஞ்சீங்க எனக் கேட்டு கோபப்படுகிறார்.

இதையும் படிங்க: போற போக்கை பார்த்தா தியேட்டர் பொழப்பும் போயிடும் போல தெரியுதே!.. போலி டிக்கெட்.. லியோ ரிலீஸுக்கு வேட்டு?..

அவர்களும் இனி நீ அம்ருதாவை தொந்தரவு செய்ய கூடாது என கறாராக சொல்லி விடுகின்றனர். ஆனால் வீட்டுக்கு அம்ருதாவுடன் தான் வருவேன் என சொல்லி விட்டு போனை வைக்கின்றார். கணேஷ் அப்பா, அம்மா சென்னை செல்வதாக முடிவு செய்து கிளம்ப தயாராகின்றனர்.

வீட்டில் எல்லா பொருள்களையும் உடைத்து அழுது கொண்டு இருக்கிறார் மாலினி. கடைசியில் முடிவெடுத்தவர் தன்னுடன் செழியன் இருக்கும் புகைப்படத்தினை அனுப்பி நீ என்னை பார்க்க உடனே வரணும். இல்லை இதுப்போல என்னிடம் இருக்கும் உன் எல்லா போட்டோவையும் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடுவேன் என மிரட்டுகிறார்.

இதையும் படிங்க: நடிக்கிறதை விட்டுட்டு இந்த தொழில் செய்யப் போறாரா வலிமை பட நடிகை?.. அவரே போட்ட போஸ்ட்டை பாருங்க!..

தொடர்ச்சியாக ஆடியோ அனுப்பி மிரட்டிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் ஜெனி தூங்கியதும் மாலினியை காண கிளம்புகிறார் செழியன். ஆனால் அவர் கதவுக்கு அருகில் போகும்போது பாக்கியா பார்த்து விடுகிறார். எங்க போற எனக் கேட்க ஆபிஸ் என மறுபடியும் கூறுகிறார். நீ அங்கலாம் போகலணு எனக்கு தெரியும். இப்போ நீ ரூமுக்குள்ள போகல வீட்டுல இருக்க எல்லாரையும் எழுப்பி இதை சொல்லிடுவேன் என மிரட்டுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top