‘விடாமுயற்சி’னு எந்த நேரத்துல பேர வச்சாங்கேளோ? அடுத்த பிரச்சினை.. இது தீரவே தீராதே

Vidamuyarchi: அஜித் த்ரிஷா நடிக்கும் படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் படம் தயாராகிக் கொண்டு வருகிறது. போன வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்னும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பாடில்லை.

படம் ஆரம்பித்ததில் இருந்தே பல பிரச்சினைகள். முதலில் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து வெளியேற அதன் பிறகு ஒளிப்பதிவாளர் படத்தில் இருந்து விலக என தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இதையும் படிங்க: அஜித் மச்சானுடன் ஷகீலாவுக்கு வந்த காதல்… திருமண நேரத்தில் நடந்த பிரேக்அப்… புதுக்கதையா இருக்கே?..

இந்த நிலையில் முழு மூச்சுடன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் டிசம்பருக்கு முடித்துவிடுவதாக படக்குழு தெரிவித்தது. ஆனால் இடையில் லைக்காவிற்கு பணப்பிரச்சினை மற்றும் அஜர்பைஜானில் பனிப்பொழிவு என கொஞ்ச நாள்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தது.

வேட்டையன் திரைப்படமும் லைக்கா தயாரிப்பு என்பதால் அந்தப் படத்தின் படப்பிடிப்பும் மீண்டும் இன்றுதான் ஆரம்பித்திருக்கிறது. அதற்காக ரஜினி ஐதராபாத் செல்லும் வீடியோ வெளியானது. அதனால் விடாமுயற்சி படமும் ஆரம்பித்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில்,

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? பதிலடி கொடுத்த சின்னத்திரை நடிகர் சஞ்சீவ்…

த்ரிஷாவால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் அதிகமாக படமாக்கப்படவேண்டுமாம். அவர் கமலின் தக் லைஃப் படத்தில் பிஸியாக இருப்பதால் இங்கு வரமுடியாத சூழ்நிலையில் இருக்கிறார் த்ரிஷா.

விடாமுயற்சி படத்திற்காக த்ரிஷா கொடுத்த கால்ஷீட்களை படக்குழு வீணாக்கிவிட்டது. அதற்கு பல காரணங்களும் இருக்கிறது. எனவே, த்ரிஷா எப்போது கால்ஷீட் கொடுப்பார் என எதிர்பார்த்து காத்திருக்கிறது படக்குழு. பொதுவாக ஹீரோவின் கால்ஷீட்டுக்காகத்தான் காத்திருப்பார்கள். ஆனால், விடாமுயற்சி படக்குழு திரிஷாவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 

Related Articles

Next Story