வடிவேலுவால இனி பழையபடி காமெடியைக் கொடுக்க முடியாது… இதுதான் காரணமாம்… பிரபலம் விளாசல்!

by sankaran v |
vadivelu
X

vadivelu

Vadivelu: வைகைப்புயலாக தமிழ்த்திரை உலகில் காமெடியில் கொடிகட்டிப் பறந்தவர் வடிவேலு. இவர் பேசிய ஒவ்வொரு டயலாக்கும் மீம்ஸ்களாயின. ஆனா அவருக்கே இப்போ சோதனையான காலகட்டம். அவருடைய காமெடி ரசிக்கும்படி இல்லை. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க.

வடிவேலுவோடு காமெடி குரூப்ல 10 பேரு இருப்பாங்க. அவங்க வேற காமெடி நடிகர் நடிக்கிற படத்துல நடிக்கக்கூடாது. என்னோடு குரூப்ல இருக்குறவங்க எங்கிட்ட மட்டும்தான் நடிக்கணும்னு சொல்வாரு. அப்போ வடிவேலு பீக்ல இருந்த காலகட்டத்துல அவங்களுக்கு வருமானம் கிடைச்சது. 2011க்கு அப்புறம் பீல்டு அவுட் ஆன நேரத்துல அவங்களுக்கு யார் வாய்ப்பு தருவா? உங்க ஆளை விட்டு வரமாட்டேன்னு சொன்னேல்ல. அங்க வாய்ப்பு இல்லன்னதும் எங்க கிட்ட வாரீயான்னு கேட்பாங்க.

அது இயல்பான விஷயம்தான். அப்போ வடிவேலுவுக்குப் போட்டியாளரா விவேக் இருந்தாரு. அவரு கூடவும் 15 பேரு இருந்தாங்க. அவருக்கிட்ட சூட்டிங் இருக்கும்போது அவரு கூட நடிக்கலாம். அப்படி இல்லாத போது சந்தானம் கூடவோ, வேற காமெடி நடிகர்கூடவோ நடிக்கலாம்னு சொல்லிடுவாரு. அந்தப் பெருந்தன்மை வடிவேலுவுக்குக் கிடையாது.

ஒரு காமெடியனா இருந்துக்கிட்டு வேற மாதிரி திறமையைக் காட்டினா அதை மக்கள் ரசிக்க மாட்டாங்க. வில்லன் மாதிரி ஆளுங்கற அடையாளத்தை வெளியே காட்டினா அதை மக்கள் ரசிக்க மாட்டாங்க.

எந்த காலத்துலயும் நல்லது செஞ்சா மக்கள் பாராட்டத் தவறியதே இல்லை. அதே மாதிரி தவறு செஞ்சா திட்டத்தான் செய்வாங்க. விவேக் குமரிமுத்துவுக்கு பணம் கொடுத்து உதவி செஞ்சிருக்காரு. போண்டாமணி உடல்நிலை சரியில்லாம இருந்தபோது கூட நிறைய பேர் உதவி செஞ்சாங்க. கடைசியில அவர் இறந்தே போனாரு. ஏன் வடிவேலு அவங்க மாதிரி நடிகர்களுக்கு எதுவுமே செய்யலை?

இதை எல்லாம் மக்கள் பார்க்கும்போது அவர் காமெடி பண்ணும்போது எப்படி சிரிப்பாங்க. இப்போ முன்னாடி மாதிரி கிடையாது. மூடி மறைக்க முடியாது. எல்லாம் சோஷியல் மீடியாவுல வந்துடுது. மாமன்னன் படத்துல வேற முகம் காட்டி நடிச்சாரு. காமெடியா இருந்தவரு அப்படி நடிச்சாரு. இப்போ அவரால காமெடியைக் காட்ட முடியுமான்னா முடியாது.

காமெடி நடிகர் வடிவேலுவுக்கு பணம், புகழ், பதவின்னு எல்லாம் வரும்போது அவரோட எண்ணங்கள் மாற ஆரம்பிக்குது. இந்த சினிமாவுல நம்மதான் எல்லாம்கற எண்ணம் வந்துடுது. அப்படி வந்ததால எல்லாத்தையும் தப்புத் தப்பா பண்ண ஆரம்பிச்சிட்டாரு. அடுத்ததாக வடிவேலுவால காமெடியைக் கொடுக்க முடியல.

முதல்ல இன்னோசென்டா இருக்கும்போது சிரிக்க வச்சாரு. மனசுல ஒண்ணுமே இல்ல. இப்போ என்னென்னமோ மனசுல ஓடுது. அவரால சிரிக்க வைக்க முடியல. எண்ணங்கள் வேற மாதிரி ஆகிடுச்சு. பழைய மாதிரி காமெடியை வடிவேலுவால கொடுக்க முடியாது. அதுக்கு உதாரணம் கேங்கர்ஸ் என்கிறார் பாலாஜி பிரபு.

Next Story