வடிவேலுவை நம்பி ஆப்பு வைத்துகொண்ட சுந்தர்.சி!.. பட்ஜெட்ல பாதி கூட வரலயே!…

தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. குறைவான பட்ஜெட்டில் குறைவான நாட்களில் படப்பிடிப்பு நடத்தி வெற்றி படங்களை கொடுப்பவர் இவர். சுந்தர்.சி இயக்கிய 95 சதவீத படங்கள் வெற்றிதான். கார்த்திக், விஷால், அஜித், அருண் விஜய், ஜீவா, விமல், மிர்ச்சி சிவா, அர்ஜூன் உள்ளிட்ட பலரையும் வைத்து படம் இயக்கியுள்ளார்.,
ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கினார். நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். துவக்கம் முதலே தனது படங்களின் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். காதல் கலந்த காமெடி படங்களே இவரின் ஸ்டைல். இவர் இயக்கிய கிரி, வின்னர், லண்டன், தலைநகர் மறுபக்கம் உள்ளிட்ட பல படங்களிலும் வடிவேலுவின் காமெடி ஹலைட்டாக இருந்தது.

அதன்பின் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் கடந்த 15 வருடங்களாக எந்த படத்திலும் இணையவில்லை. ஒருபக்கம், வடிவேலும் ஏறக்குறைய சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் நிலைக்கு வந்துவிட்டார். 4 வருட இடைவெளிவிட்டு அவர் மீண்டும் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் ஓடவில்லை.
இப்போது வடிவேலு மீண்டும் தனது கேங்கர்ஸ் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் சுந்தர்.சி. ஆனால், இந்த படத்தில் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் மட்டுமே ரசிகர்களை கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறது. சுமர் 16 கோடி பட்ஜெட்டில் உருவான படம் இப்படம் இதுவரை 5 கோடியை கூட வசூல் செய்யவில்லை என்கிறார்கள்.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் ‘இம்சை அரசன் படத்திற்கு பின் வடிவேலு ஹீரோவாக நடித்த எந்த படங்களும் ஓடவில்லை.. கேங்கர்ஸ் உட்பட. காமெடியனாக நடித்த கத்திசண்டை, சந்திரமுகி 2 போன்ற படங்களும் தோல்வி. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி. காமடியில் எப்போதோ ஃபீல்ட் அவுட் ஆன வடிவேலுவை மீண்டும் நடிக்க வைத்து தனக்குத்தானே ஆப்பை சொருகிக்கொண்டார்.
கலர் கலராக கோமாளித்தனமான உடைகள் அணிவது, விதவிதமாக விக் வைப்பது, பழைய வசனங்களை ரெப்ரன்ஸ் வைத்து பேசுவது என மொக்கை போடுகிறார் வடிவேலு. இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போதுள்ள ரசிகர்களுக்கு பிடிக்கும் படி காமெடியை செய்தால் மட்டுமே வடிவேலு இனி ஜெயிக்க முடியும். இல்லையெனில் மாமன்னன் போல நல்ல கேரக்டர்களில் நடித்தால் இன்னொரு ரவுண்ட் வரலாம். தயவு செய்து இந்த பழைய பாணி அறுவை காமடிகளை தவிர்க்கவும். தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் மிகவும் நொந்துபோய் இருக்கிறார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.