ரீ-என்ட்ரி-னா இது தான் ரீ-என்ட்ரி.! வைகைபுயலின் அதிரவைக்கும் அடுத்தடுத்த அப்டேட்கள்.!

திரையுலகில் பல பிரபலங்கள் திரைக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என விரும்புவார்கள். அதில் ஒரு சிலர்களை தான் தங்களது எதிரிகளாக கருதப்பட்டாலும், அந்த நடிகர் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என விருப்பப்படுவர். அப்படி ஒருவர் தான் வைகைபுயல் வடிவேலு.

நல்ல காமெடி பார்த்து ரெம்ப நாள் ஆகிவிட்டது. அந்த வடிவேலுவை சீக்கிரம் நடிக்க வர சொல்லுங்கப்பா என புரட்சி கலைஞர் விஜயகாந்த்தே தனது குடும்பத்தாரிடம் கூறும் அளவிற்கு திரையுலகமே காத்திருக்கிறது அவரது வரவிற்காக.

தற்போது வடிவேலுவும் தயாராகிவிட்டார். ஆனால் ரீ என்ட்ரி என்றால் ஒரு படத்தின் மூலம் இல்லை. நாம் நினைத்து கூட பார்க்காத ரீ என்ட்ரி தான் போல. ஆம், நாயகனாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் படத்தின் நாயகனாக வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையும் படித்து பாருங்கள் - கடும் போட்டி.! பூஜாவா? புஷ்பாவா?! அந்த 6 பாட்டு யாருக்கு?

அதேபோல, மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் (கர்ணன் பட லால் கதாபாத்திரம் போல ) நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த இன்ப அதிர்ச்சியை அடுத்து, ஓர் பேரதிர்ச்சியாக அடுத்த தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளாராம். காதல் படங்களை தனது பாணியில் கொடுத்த கெளதம் மேனன், தற்போது வடிவேலு பாணியில் காதல் கதையை ரசிகர்களுக்கு கொடுக்க உள்ளாராம்.

இது போக இன்னும் நிறைய ஆச்சர்யங்கள் காத்துக்கிடக்கின்றன என்கிறது திரையுலகம். கெளதம் மேனன் தற்போது, வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பை முடித்துவிட்டு, துருவ நட்சத்திரம் சில காட்சிகளை முடித்து விட்டு, அடுத்ததாக வடிவேலு படத்திற்கு வருவாராம். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story