வேட்டி சட்டை விஷயத்துல விஜயகாந்தை மறக்கலாமா வடிவேலு? வெளுக்கும் பயில்வான் ரங்கநாதன்

vijayakanth, vadivelu
Vadivelu: வடிவேலுவுக்கு இன்னும் திமிர் அடங்கவில்லை. அவர் இப்போது கோடிகளில் புரள்கிறார். கம்பேக்னு கேங்கர்ஸை சொல்ல முடியாது என்கிறார் பயில்வான். அதே நேரம் அவருக்கு வேட்டி சட்டை வாங்கிக் கொடுத்த கேப்டனையே மறந்துட்டாரே என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். என்ன சொல்றாருன்னு பாருங்க.
ராஜ்கிரண்தான் எனக்கு குருன்னு சொல்றாரு. அவரும் சம்பளம் கொடுக்கலன்னு சொல்லி வருத்தப்படுறாரு. சம்பளம் கொடுக்காம எப்படி சாப்பிட்டாரு? எப்படி சட்டை, பேண்ட் போட்டாரு? ஆனால் இடையில் சில பேர் வந்து எனக்கு வேட்டி, சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்னு சொல்றாங்க. அதெல்லாம் பொய் என்கிறார். எனக்குத் தெரிந்து வடிவேலு தான் பேட்டி கொடுத்தார்.
சின்னக்கவுண்டர் படத்துல நடிச்சிக்கிட்டு இருக்கும்போது கேப்டன் விஜயகாந்த் 'என்னப்பா நம்மூர்க்காரனா? என்ன வேட்டி எல்லாம் இப்படி இருக்கு?'ன்னு கேட்டுள்ளார். அதற்கு 'இல்லண்ணே… இந்த ஒரு வேட்டி, சட்டைதான் இருக்கு'ன்னு வடிவேலு சொல்ல, உடனே அவருக்கு நாலைந்து செட் வேட்டி சட்டை வாங்கிக் கொடுத்துள்ளார் விஜயகாந்த். இது அப்போதே பத்திரிகை செய்தியாக வந்தது. இன்னைக்கு எத்தனை டைரக்டர் ஊருல இருந்து கார்ல வந்துருக்காங்க? ஊருல இருந்து டிரெய்ன், பஸ்ல தான் வந்துருக்காங்க. இங்க வந்து சம்பாதித்ததுதான்.

அப்படிப்பட்ட சூழலில் எனக்கு வேட்டி சட்டை வாங்கிக் கொடுத்தாரு என்பதை வடிவேலு ஏன் மறுக்க வேண்டும். ஏன் விஜயகாந்த் வேட்டி சட்டை வாங்கிக் கொடுத்தாருன்னு சொன்னா வடிவேலு குறைஞ்சிப் போயிடுவாரா? அவரோட ஆரம்ப முகத்தைப் பாருங்க. இப்ப உள்ள முகத்தைப் பாருங்க. உங்களுக்குத் தெரியும். வறுமையிலே வாடிக்கிடந்த வடிவேலு எப்படி இருந்தார்?
இப்போ கோடிகளில் புரளக்கூடிய வடிவேலு எப்படி இருக்கிறார்னு பாருங்க. இப்ப வடிவேலு கம்பேக்னு படம் வந்துச்சே. சுந்தர்.சியும், வடிவேலுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடித்திருக்கும் படம் கேங்கர்ஸ். இதுல 'வளவள வைக்கப்படப்பு' மாதிரி வடிவேலு பேசிக்கிட்டே இருக்காரு. காமெடியே வரல. ஆனா அதே படத்துல பகவதி பெருமாள் அருமையா நடிச்சிருக்காரு. அவர் வடிவேலுவை விட காமெடியில் கைதட்டல் வாங்குகிறார். அதே கேங்கர்ஸ்ல வடிவேலுவின் பெண் வேடம் நல்லாருக்கு. கிளைமாக்ஸ்ல அதிரிபுதிரி பண்ணியிருக்கிறார்.
ஆனால் அந்தப் படம் போட்ட முதலீடுக்கு வருமானம் வருமா என்பதுதான் சந்தேகம் என்றுதான் சினிமா உலகில் இன்று கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு கதை, வசனம் எழுதியது சுந்தர்.சி. இல்லை. வேறு ஒருவர். அவர் எழுதியதில் காமெடி இல்லை. எனவே வடிவேலு கம்பேக் என்பது கேங்ஸ்டர் படத்தில் உறுதி செய்யப்படவில்லை என்கிறார் பயில்வான்.