இளையராஜாவோட மீண்டும் இணைந்து நல்ல பாடல்களை கொடுப்பீங்களா?.. ஒரு செகண்ட் கடுப்பான வைரமுத்து!..

0
850

இளையராஜா மற்றும் வைரமுத்து இருவர் மத்தியில் புகைந்து கொண்டிருந்த பனிப்போர் சமீபத்தில் பெரிதாக வெடித்தது. படிக்காத பக்கங்கள் படத்துக்கு பாடல் எழுதிய வைரமுத்து இசை பெரியதா? மொழி பெரியதா? என்கிற சர்ச்சை தமிழ்நாட்டில் எழுந்து வருகிறது. மொழியும் இசையும் இணைந்தால் தான் நல்ல பாடல் உருவாகும். இதை அறியாதவன் அஞ்ஞானி என இசைஞானியை சீண்டி வைரமுத்து பேசிய நிலையில், பெரிய சர்ச்சை வெடித்தது.

வைரமுத்து ஒரு நல்ல மனுஷனே கிடையாது. எங்க வீட்ல எங்க தயவுல வளர்ந்து பெரிய ஆளாகிட்டான் என்றும் இன்னொரு வார்த்தை எங்க அண்ணன் இளையராஜா பற்றி அவன் எதாவது பேசினால் அவ்வளவு தான் என வைரமுத்துவை நேரடியாகவே இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் வச்சு விளாசினார்.

இதையும் படிங்க: கன்ட்ரோல் எல்லாம் எப்பவோ காத்துல பறந்துடுச்சு!.. காஞ்சனா நடிகை போட்டுருக்க டிரெஸ் அப்படி!..

ஆனால், அதற்கு வைரமுத்து மறைமுகமாக ட்வீட் போட்டு மக்கள் சப்போர்ட் எனக்கு இருக்கு என்பது போல பதிவிட்டு வந்தார். இளையராஜா இங்கே நடக்கும் பிரச்சனை எல்லாம் எனக்கு தெரியவே தெரியாது. நான் வெளிநாட்டில் சிம்பொனியையே எழுதி முடித்து விட்டேன் என வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து முடிந்த பிரச்சனையை மீண்டும் கிளர விரும்பவில்லை என்று ஆரம்பத்திலேயே எண்ட் கார்டு போட நினைத்தாலும் பத்திரிகையாளர்கள் விடாமல் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைரமுத்து நான் சர்ச்சைகளை உருவாக்குபவன் அல்ல, சர்ச்சைகளில் இருந்து விலகி நிற்பவன் என பதில் அளித்தார்.

இதையும் படிங்க: கேரவானுக்குள் வந்து சட்டையை கழட்டிய இயக்குனர்!.. உறைந்து போன காஜல் அகர்வால்!..

மேலும், இந்த பிரச்சனை பற்றி பேசுவது நாகரீகமற்ற செயல் என்றும் பேசியுள்ளார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் வைரமுத்துவிடம் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து நல்ல பாடல்களை கொடுப்பீர்களா எனக் கேட்டதும் டென்ஷனான வைரமுத்து 30 ஆண்டுகளாக இளையராஜாவுடன் இணையாமல் எத்தனையோ நல்ல பாடல்களை கொடுத்துள்ளேன் என ஒரே போடாக போட்டுள்ளார்.

உங்கள் மகன் மதன் கார்கி தமிழ் எழுத்துக்களில் பாடல்கள் எழுதாமல் ஆங்கிலத்தில் பாட்டு எழுதுறாரே எனக் கேட்க, கூகுள் என்பது ஆங்கில வார்த்தை அதை அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் முட்டுக் கொடுத்தார்.. விசில் போடு, பார்ட்டி, ஷாம்பைன் என ஏகப்பட்ட ஆங்கில் வார்த்த்தைகளை பயன்படுத்தி தான் மதன் கார்கி பாடல்களை போட்டு வருகிறார் என செய்தியாளர்கள் கேட்கும் முன்பு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

இதையும் படிங்க: சூட்டிங் ஸ்பாட்டில் கமல் செய்த கலாட்டா!… போட்டோ எடுக்கறதுக்குள்ள உதவியாளர் பட்ட பாட்டைப் பாருங்க!

google news