வைரமுத்து தன்னுடைய பாடல்களில் இதை இதுவரை செய்ததே இல்லை!... கவனிச்சி இருக்கீங்களா…

Vairamuthu: தமிழ் சினிமாவில் வைரமுத்து மீது எத்தனை விதமான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரின் வரிகளுக்கு தமிழ் ரசிகர்கள் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இருக்கும் போது ரசிகர்களை மனதில் வைத்தே வைரமுத்து தன்னுடைய பாடலில் சில விஷயத்தினை செய்யவே மாட்டார்.

வைரமுத்துவின் வரிகளை ரசிகர்களுக்கு சரியாக கொண்டு சென்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். வைரமுத்துவின் தேர்ந்த கவிதைகள் நிறைய பாடலாக உருவாகி இருக்கிறது. மெட்டுக்கு பாடல் வரி எழுதுவதில் வைரமுத்துக்கு நிகர் அவரே தான்.

இதையும் படிங்க: நானும் எம்.ஜி.ஆரும் பெரிய தப்பு பண்ணிட்டோம்!. பல வருடங்கள் கழித்து ரஜினியிடம் சொன்ன சிவாஜி..

தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் அதிகம் இளம் வயதினர் என்பதால் காதல் கதையை தாண்டி சொல்வது கடினம் தான். அதனால் அவரின் கவிதை தொகுப்பை கூட பாடலாக மாற்றிய வேலை எல்லாம் நடந்து இருக்கிறது. இதனால் கூட மற்ற பாடலாசிரியருக்கு ரஹ்மான் கதவுகளை திறக்காமலே இருந்தார்.

இருவரின் முதல் பாடலும் ஹிட் அடிக்க தொடர்ந்து பல்லாண்டு பயணித்தனர். இது சினிமா உலகமே நிர்ணயித்த விஷயமாகி விட்டது. இதற்கிடையில் வைரமுத்துவிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது அவநம்பிக்கையை போதிக்கும் பாடலை எழுதவே மாட்டார். நெகட்டிவாக எழுதவும் ஒப்புக்கொள்ளவே மாட்டாராம்.

அப்படி ஒரு முறை ஒரு தற்கொலை பாடல் வரிக்காக இயக்குனர் ஒருவர் வைரமுத்துவை நாடி இருந்தாராம். வாழ்க்கையே போச்சு என்ற நிலையில் கூட வைரமுத்து என்ன பாடல் எழுதினார் தெரியுமா? நாளைக்கும் நிலவு வரும். நாம் இருக்க மாட்டோம். காதலை வாழ வைத்து காதலர்கள் போகிறோம்.

இதையும் படிங்க: ஏலியனை நம்பி ஏமாந்துப் போன சிவகார்த்திகேயன்!.. அனுமானை நம்பி அஜித் வசூலையே வீழ்த்திய இளம் ஹீரோ!..

 

Related Articles

Next Story