அடுத்த ஒரு ஷாம்பூ டப்பாவ ரெடி பண்ணும் வைரமுத்து! சுசித்ரா சொன்னது சரிதான்

Vairamuthu: தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்ற அடைமொழிக்கு சொந்தக்காரராக திகழ்பவர் வைரமுத்து. பாடல் ஆசிரியர் ஆக மட்டுமல்லாமல் பல புதினங்கள் நாவல்கள் சிறுகதைகள் என இலக்கியங்கள் சார்ந்த பல நூல்களை எழுதி வருகிறார். வைரமுத்து என்று சொன்னாலே அனைவர் மனதிலும் நிற்பது கள்ளிக்காட்டு இதிகாசம். இது வைரமுத்துவின் நூல்களில் மிகவும் பிரபலமான ஒரு புத்தகம்.

சினிமாவில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் வைரமுத்து. ஆனால் அந்த புகழை எல்லாம் ஒரே நொடியில் காலி பண்ணியவர் பாடகி சின்மயி. சின்மயிடம் வைரமுத்து பாலியல் ரீதியாக சில செயல்களை செய்தார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதைப் பற்றி நடிகர் சங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதையும் படிங்க: மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதில் நடிக்கவேண்டியது அவர்தான்!.. எப்படி மிஸ் ஆச்சி!..

இருந்தாலும் சின்மையி அவருடைய கருத்திலிருந்து பின்வாங்கவில்லை. இப்போது வரை அவருடைய கருத்தில் உறுதியாக இருக்கிறார். ஆனால் சின்மயிக்கு அவருடைய வேலை பறிபோனது தான் மிச்சம். இதைப் பற்றி பிரபல பாடகி சுசித்ரா பல தகவல்களை பகிர்ந்திருந்தார் .சின்மயிக்கு மட்டும் வைரமுத்து டார்ச்சர் கொடுக்கவில்லை. எனக்கும் சில சம்பவங்கள் நடந்தது என்றும் கூறியிருந்தார்.

வைரமுத்துவின் டார்கெட்டே பாடகிகள் தான். அவர்களிடம் நெருங்க வைரமுத்து கையாளும் வார்த்தைகள் என்னவென்றால் உன்னுடைய குரலில் காமம் இருக்கிறது. உன்னுடைய சிரிப்பு நன்றாக இருக்கிறது. ஒரு காதல் இருக்கிறது .இப்படி எல்லாம் பேசித்தான் தன்னுடைய வலையில் விழ வைப்பார் வைரமுத்து என சுசித்ரா கூறி இருந்தார்.

இதையும் படிங்க: ஓடிடி, சேட்டிலைட் எல்லாமே வீழ்ச்சி… வேட்டையன் படத்துக்கு 70 சதவீத லாபம் வந்தது எப்படி?

அப்படி என்னிடமும் சொல்லி உனக்கு ஒரு பரிசு தருகிறேன் என அவர் வீட்டிற்கு அழைத்தார். நான் என் பாட்டியுடன் சென்றிருந்தேன். அது அவருக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. என் பாட்டி வைரமுத்துவிடம் பரிசு எங்கே எனக் கேட்டபோது அவர் வாங்கி வைத்திருந்தால் தானே கொடுக்க முடியும். அவருடைய நோக்கம் வேற. இருந்தாலும் என் பாட்டி கேட்டார் என்பதற்காக அவர் வீட்டில் இருந்த ஷாம்பு பாட்டிலை எடுத்து வந்து எனக்கு பரிசாக கொடுத்தார் என சுசித்ரா கூறினார்.

இந்த நிலையில் வைரமுத்துவின் இன்னொரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஒரு பாடல் கம்போசிங்கில் ஒரு பாடகர் ஒரு பாடகி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடகிக்கு வைரமுத்து எப்படி பாட வேண்டும் என சொல்லிக் கொடுத்து வருகிறார். அப்போது அந்தப் பாடகி பாடும் போதே வைரமுத்து இடையில் உன்னுடைய ஸ்மைல் மிக அற்புதமாக இருக்கிறது என கூறுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் அங்கு ஒருத்தன் உயிரைக் கொடுத்து பாடிக்கிட்டு இருக்கான். இவருடைய நோக்கம் எப்படி போகுதுன்னு பாரு என வைரமுத்துவை வச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இதையும் படிங்க: தக் லைஃப்ல லீக்கான அந்த மூணு விஷயங்கள்… ஹைப்பை அள்ளும் ஹைலைட்டுகள்

இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/PhoenixAdmk/status/1835988051039768824

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it