வீரதீர சூரன் 2 படம் விநியோகஸ்தர்களுக்கு லாபமா? நட்டமா? இப்படி 'பளிச்'சுன்னு சொல்லிட்டாரே!

by sankaran v |   ( Updated:2025-05-05 20:58:02  )
veeradheerasooran2
X

veeradheerasooran2

Vikram: விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அந்தளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. அதே நேரம் அதற்கு அடுத்ததாக எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் 2ம் பாகம் வெளியானது.

அந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், ப்ருத்வி ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படமாவது வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் பெரிய அளவில் ரீச் ஆக வில்லை. இந்த நிலையில் இந்தத் திரைப்படம் லாபமா, நட்டமா? பிரபலம் ஒருவர் சொல்றாரு. வாங்க பார்க்கலாம்.

விக்ரம் நடித்த வீர தீர சூரன் வெற்றிப்படமாக அமைந்ததா? இதன் அடுத்த பாகம் வெளியாகுமா என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.

திரைப்படங்களுடைய வெற்றி, தோல்வியைப் பற்றிப் பேசறதுக்கே சங்கடமாகத்தான் இருக்கு. ஏன்னா எல்லா நட்சத்திர ரசிகர்களும் அவங்களுக்குப் பிரியமா நடிச்ச கதாநாயகர்களுடைய எல்லா திரைப்படங்களும் வெற்றி என்ற எண்ணத்தில் தான் இருக்காங்க. இல்லைன்னா வெற்றி என்றே சொல்லப்பட வேண்டும் என்றும் ஆசைப்படுறாங்க.

வீர தீர சூரன் திரைப்படத்தைப் பொருத்தவரைக்கும் அந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபத்தைப் பெற்றுத் தந்த படமாக அமையவில்லை. இன்னும் சொல்லப் போனால் நட்டத்தைத் தந்த திரைப்படமாகவே அமைந்தது என்று சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

#image_title

வீரதீர சூரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு இரவுக்குள் நடக்கும் கதை. விக்ரமை காளி கேரக்டரில் மாஸாக காட்டியுள்ளார் இயக்குனர் S.U.அருண்குமார். நடிப்பிலும் வழக்கம்போல விக்ரம் மிரட்டியுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் 'மதுரை வீரன்தானே' பாடலைப் போட்டு அதகளம் பண்ணி இருக்கிறார்கள். துஷாரா விஜயன் அருமையான நடிப்பு. கதை, திரைக்கதை வசனமும் அருமையாகத்தான் உள்ளது. ஆனால் படம் ஏன் நட்டமானது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

Next Story