என்னை நம்புன முதல் ஹீரோ அஜித் தான்… சொன்னதை செய்து காட்டிய வெங்கட்பிரபு!

ajith, venkat prabhu
அஜித் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மங்காத்தா என்ற படத்தில் நடித்தார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. 2011ல் அஜித், அர்ஜூன், திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி, அஸ்வின்னு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள், பிஜிஎம் எல்லாமே தெறிக்க விட்டன. 'விளையாடு மங்காத்தா' என்ற பாடலும் 'மச்சி ஓப்பன் தி பாட்டில்' பாடலும் போதும். செம டிரண்ட் ஆகின.
அதே போல படத்தின் தீம் மியூசிக் ரசிகர்களை சுண்டி இழுத்தது. இவ்வளவு பெரிய வெற்றியை வெங்கட்பிரபு தனக்கு தருவார் என்று அஜித்துக்கு முன்பே எப்படி தெரிந்தது? இந்தக் கதையை வெங்கட்பிரபு எப்படி சொன்னார்? அஜித் எப்படி ஒப்புக்கொண்டார்?
அஜித்தைப் பொருத்தவரை ஓடாதக் குதிரையையும் ஓட வைப்பார். அப்படித்தான் சிறு சிறு வேடங்களில் வில்லனாக நடித்து வந்த அர்ஜூன்தாஸ் என்ற நடிகரை குட் பேட் அக்லியில் தனக்கு இணையான வில்லனாக நடிக்க வைத்து அழகு பார்த்தார். தனக்கு இணையான வில்லனுக்கு ஒரு சாங் கூட கொடுக்க சம்மதித்துள்ளார் அஜித். சின்ன பையனா இருந்தாலும் திறமை இருக்கு. வளர்ந்துட்டுப் போகட்டுமே என்ற நல்லெண்ணம் தான் அதற்குக் காரணம்.
இனி அவரது மார்க்கெட்டே வேற லெவல்தான். அருண்விஜயை என்னை அறிந்தால் படத்தில் பிரபலம் ஆக்கினார். இது மாதிரி தான் தனக்கும் நடந்தது என்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. அவர் அஜித் குறித்து என்ன சொல்றாருன்னு பாருங்க.
ஆதிக் சார் சொன்னாரு… எனக்கு எந்த படமும் ஓடாத நேரத்துல அஜித் சாரு என்ன கூப்பிட்டு சான்ஸ் கொடுத்தாருன்னு. அதே மாதிரி என்னைக் கூப்பிட்டும் சான்ஸ் கொடுத்தது அஜித் சார் தான். என்ன நம்புன முதல் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், ஏகே, தல அஜித் மட்டும் தான் என்கிறார் வெங்கட் பிரபு.
நேர் கொண்ட பார்வை படத்துல நடிக்கும்போதே அஜித், ஆதிக்கிடம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று சொன்னாராம். அந்த நேரத்தில் ஆதிக்கின் இயக்கத்தில் பெரிய ஹிட் ஒன்றும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நம்பிக்கைக்கு எந்தவித பங்கமும் நேராத வகையில் வெங்கட்பிரபுவும் மங்காத்தாவை மாஸ் ஹிட்டாக்கி அசத்தி விட்டார்.