More
Categories: Cinema News latest news tamil cinema gossips

வெற்றிமாறனால் வெறுப்பாகிய சூப்பர் இயக்குனர்.! இறுதியில் 20 வருட நட்பு தான் அவரை காப்பாற்றியது.!

தற்போது ஒரு படத்தை ஒரு நல்ல தயாரிப்பாளரிடம் கொடுத்து அதனை படமாக்கி, அதனை சரியான நிறுவனத்திடம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது அவ்வளவு சிரமமாக இருக்கிறது.

இப்படி இருக்கும் வேளையில், ஒரு திறமையான நல்ல இயக்குனரை தமிழ் சினிமா முக்கிய நபர்கள் அலைக்கழித்துள்ளனர் என்கிற கசப்பான உண்மை தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், அதனை அவர்கள் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார்கள், அதற்கான சூழ்நிலை அமைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

Advertising
Advertising

நல்ல படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு ஒரு இயக்குனரிடம் கதை கேட்டு அது பிடித்து போய் தயாரிப்பதற்கான வேலைகள் அடுத்தகட்ட நகர்வுக்கு காத்திருந்ததாம்.

அந்த சமயம் தான் வெற்றிமாறன் அந்த இயக்குனரிடம கதை கேட்டுள்ளார். உடனே பிடித்து போய் நானே தயாரிக்கிறேன் என கூறவே , இந்த இயக்குனர் என்ன சொல்வது என்று தெரியாமல் எஸ்.ஆர்.பிரபுவிடம் கூறி கதையை வாங்கி வந்துவிட்டாராம்

ஆனால், வெற்றிமாறன் அதனை தயாரிக்க காலதாமதம் ஆகிவிட்டாராம். உடனே நண்பர்கள் உதவியுடன் இயக்குனர் ராமிடம் கதை கூற அவர் யுவனிடம் அனுப்பிவிட்டாராம். அவரும் கதை நன்றாக இருக்கிறது. மாமனிதன் ரிலீசுக்கு பிறகு தயாரிக்கிறேன் என கூறிவிட்டாராம்.

இதையும் படியுங்களேன் – வாலை சுருட்டி அடக்க ஒடுக்கமாகிய வடிவேலு.! வாங்குன அடி கொஞ்ச நஞ்சமா.?!

இறுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அந்த இயக்குனருக்கு 20 வருட நண்பரும் சிங்கப்பூர் தொழிலதிபருமான ஒரு நபர் அந்த படத்தை தயாரிக்க முன்வந்து உடனே தயாரிக்கவும் செய்து தற்போது ரிலீசுக்கு ரெடி செய்துவிட்டார். அந்த டிரைலரும் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது.  படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டிவிட்டது.

அந்த படம் தான் கருணாஸ் நடித்துள்ள ஆதார் திரைப்படமாம். முதலிலேயே வெற்றிமாறன் முழுதாக நிலவரத்தை கேட்டிருந்தால் அவர் கூறியிருப்பார். இப்படி இத்தனை வருடம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்காது என்கிறது சினிமா வட்டாரம்.

Published by
Manikandan

Recent Posts