அர்ஜூனால் ஸ்தம்பித்து நிற்கும் ‘விடாமுயற்சி’! இருக்குற பிரச்சினை போதாதுனு இது வேறயா?

Vidamuyarchi: விடாமுயற்சி திரைப்படம் வருமா வராதா? இல்லை என்றைக்காவது வருமா என்ற நிலையில் தான் இப்போது அந்த படத்தில் நிலைமை ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் தான் விடா முயற்சி .ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பில் இப்போது வரை அந்த பிரச்சனை பெரிதாகி இப்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போயிருக்கின்றது.

தற்போது அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்குள் அந்த இடைப்பட்ட காலத்தில் விடாமுயற்சி படத்தை முடித்து விடலாம் என்ற கணக்கில் இருக்க விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

இதையும் படிங்க: இயக்குனர்களை இப்படி தேர்ந்தெடுத்தே ஹிட் படங்களை கொடுத்தேன்!.. சீக்ரெட் ஆப் சக்சஸ் சொல்லும் மோகன்!…

ஆனால் இப்போது அதுக்கும் ஒரு இடையூறு வந்ததாக சொல்லப்படுகிறது. ஏனெனில் நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடைய மகள் திருமணம் இன்னும் சில நாளில் நடைபெற இருக்கிறது. அர்ஜுனை இந்த மாத படப் பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஆனால் என் மகள் திருமணம் முடிந்த பிறகு தான் நான் வர முடியும். அதனால் படப்பிடிப்பை தள்ளிப் போடுங்கள் என சொல்லி இருக்கிறார்.

அதனால் இந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்க இருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 24ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றால் கண்டிப்பாக தீபாவளி அன்று விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விடாமுயற்சி படத்தில் ஏகப்பட்ட பெரிய நடிகர்களின் காம்போ காட்சிகள் இருப்பதால் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் காட்சியை படம் பார்க்க முடியாத சூழ்நிலையும் இருக்கிறது.

இதையும் படிங்க: ஒரே ஒரு லெட்டர்தான் போட்டேன்!.. பணத்தை அனுப்பிட்டார்!.. விஜய் சேதுபதியை புகழும் பிரபலம்!..

மேலும் இந்தியன் 2 படத்தின் பிசினஸில் இருந்து வரும் தொகையை வைத்து தான் விடாமுயற்சி படப்பிடிப்பை தொடங்கலாம் என்று இருந்தார்களாம். ஆனால் இந்தியன்2 படத்திற்கு ஏகப்பட்ட பணத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் முதலீடு செய்திருப்பதால் முதலில் ‘அந்த பிசினஸில் இருந்து எங்களுக்கு தேவையான தொகையை நாங்கள் எடுத்துக் கொண்ட பிறகே உங்களுக்கு’ சொல்லி இருக்கிறதாம். ஆக மொத்தம் ஏகப்பட்ட ஈகோ கிளாசில் இந்த விடாமுயற்சி படம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story