விஜய் அரசியலுக்குப் போனா என்ன? ஆளே இல்லையா? அசால்டாகப் பதில் சொல்லும் பிரபலம்

vijay
Vijay: தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன்தான்னு சொல்லிட்டாரு. அதனால அந்த இடத்துக்கு இனி கடும்போட்டி இருக்கும்னு பலரும் சொல்றாங்க. ஏற்கனவே சிவகார்த்திகேயன்கிட்ட தான் துப்பாக்கியைக் கொடுத்தாரு விஜய். அதனால அவருதான் அந்த இடத்துல வருவாருன்னும் சொல்லப்படுது. இதே கேள்வி பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பதில் சொல்கிறார். என்னன்னு பாருங்க.
கடைசியாக 10 வருஷமா ஸ்டார் கல்ச்சர் தான் இருந்தது. கன்டன்ட் கல்ச்சரே இல்லை. பெரிய ஸ்டார் படத்துல கதையே கிடையாது. அவங்க ஸ்டைலதான் காட்டுவாங்க. கன்டன்ட் இல்லாம படம் இருக்குறதுல பிரயோஜனமே கிடையாது.
டிராகன், குடும்பஸ்தன் படங்கள்ல கன்டன்ட் இருக்கு. அதனால ஓடுச்சு. ஆனா சாதாரண ஆர்டிஸ்ட்தான். போன ஒரு வருஷமா அத்தனை ஸ்டார் படமும் பெய்லியர்தான். அமரன் மட்டும்தான் ஹிட். விஜய் இந்த நேரத்துல சினிமாவை விட்டு அரசியலுக்குப் போறது பெரிய இழப்பு தான். அதுக்காக விஜயை நம்பித்தான் இந்த சினிமா உலகமே இருக்குன்னு பேச வேண்டிய அவசியம் இல்லை.

விஜய் இல்லன்னா இன்னும் ரெண்டு ஹீரோக்கள் அவரு இடத்துக்கு வரப்போறாங்க. விஜய் ஆரம்பத்துல வரும்போது பெரிய ஸ்டாராகத் தான் வந்தாரா? இல்லைல. அது மாதிரிதான் எல்லாரும் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.
அது மட்டுமல்லாமல், எந்த ஹீரோவுமே கன்டன்ட் நல்லாருந்தா தான் மினிமம் கேரண்டியைத் தர முடியும். ஃபேன் பாய்க்காக படம் எடுத்துத்தான் ஹிட் கொடுத்தா எதிர்காலத்துல மக்களுக்கு நல்ல படம் கிடைக்காது. டைரக்டர் சொன்னபடி கேட்டுப் படம் பண்ணுங்க. அவங்க புத்திசாலித்தனமா படம் எடுப்பாங்க. எல்லா முன்னணி ஹீரோக்களையும் நான் கேட்டுக்கறது இது ஒண்ணுதான் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.
விஜயின் அரசியல் பயணத்துக்கு ஜனநாயகன் படம் உறுதுணையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதே நாளில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வருவதிலும் அரசியல் உள்ளது என்றும் பேசப்பட்டு வருகிறது. அதே நேரம் விஜய் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கே வரவேண்டியது தான். ஆனால் சில காரணத்தால் தான் அது பொங்கலுக்குத் தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.