என் வீட்டிற்கு பைக்கில் வந்தவர்கள்.. காரில் தான் செல்ல வேண்டும்- இயக்குநருக்கு கார் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்த விஜய்!!

கடந்த 2003ம் ஆண்டு விஜய், ஜோதிகா, விவேக், ரகுவரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் திருமலை. இந்த படத்தின் இயக்குநர் ரமணா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

thirumala

அந்த பேட்டியில், தான் முதலில் ஒரு ஸ்ப்ளெண்டர் பைக் வைத்திருந்ததாகவும், அந்த பைக்கில் தான் நடிகர் விஜயின் வீட்டிற்கு சென்று திருமலை படத்தின் கதையை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். கதை பிடித்து, அவர் ஓகே சொல்லி, படம் வெளியாகி, ஹெட்டாகி விட்டது. அதற்கு பிறகு ஒரு நாள் இயக்குநர் ரமணாவை வீட்டிற்கு அழைத்த விஜய், அவரிடம் பணம் கொடுத்துள்ளார்.

சம்பளம் வந்துவிட்டது இதெல்லாம் வேண்டாம் என்று இயக்குநர் ரமணா கூறியுள்ளார். ஆனாலும் விஜய் கட்டாயப்படுத்தி அந்த பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் கார் வாங்கிக்கொண்டு நேராக நடிகர் விஜயின் வீட்டிற்கு சென்று காட்டியுள்ளார் இயக்குநர் ரமணா. அப்போது, அவரிடம் காரில் ஒரு ரவுண்ட் போலாமா என்று கேட்டு இருவரும் ஒன்றாக சென்று வந்துள்ளனர்.

thirumalai director

பிறகு சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து இயக்குநர் ரமணா வீட்டிற்கு புறப்பட்ட போது, விஜய் அருகில் இருந்த ரமணாவின் மேனேஜரிடம், முதன் முதலில் இவர் இந்த வீட்டிற்கு பைக்கில் வந்து என்னிடம் கதை சொன்னார். இப்போது இங்கிருந்து காரில் செல்கிறார். என் வீட்டிற்கு பைக்கில் வருபவர்கள், காரில் திரும்பிச் செல்ல வேண்டும். அதை நான் பார்த்து ரசிக்க வேண்டும் என விஜய் கூறியுள்ளார்.

என் வாழ்க்கையில் நான் வாங்கிய முதல் கார் அது தான். என் வாழ்க்கையில் திருமலைக்கு முன், திருமலைக்கு பின் எல்லாம் கிடையாது. எல்லாமே திருமலைக்கு பின் தான். அவர் அன்று அந்த கதைக்கு ஓகே சொல்லாமல் இருந்திருந்தால், இன்று வரை நான் எங்கேயாவது கதை எழுதிக்கொண்டு இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ரமணா.

இதையும் படிங்க- ரஜினி கொடுத்த பதிலடி!. என்னையே செய்ய பாக்குறியா?!. அனிருத் மீது கடுப்பில் இருக்கும் விஜய்?..

 

Related Articles

Next Story