Connect with us
vijay

Cinema News

சீரியஸான சீனில் வசனத்தை மாற்றி சொன்ன நடிகர்.. விஜய் அடித்த கமெண்ட்.. செம நக்கல்தான்!..

சினிமாவை பொறுத்தவரை படப்பிடிப்பில் சீரியஸான காட்சியில் எல்லோருமே சீரியஸாக இருப்பார்கள். ஆனால், சில நடிகர்கள் ஷாட் வைப்பதற்கு முந்தையை நொடி வரை ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள். ஷாட் ரெடி என சொன்னதும் கதாபாத்திரமாக மாறி அசத்திவிடுவார்கள். தனுஷ், ரகுவரன், பிரகாஷ் ராஜ் என பலரையும் இதற்கு உதாரணமாக சொல்வதுண்டு.

சில சமயம் வசனத்தை மாற்றி பேசும்போது அது காமெடியாகவும் முடிந்துவிடும். அந்த காலத்தில் நாடகம் என்றால் என்ன வசனம் கொடுக்கப்பட்டதோ அதை மட்டுமே பேச வேண்டும். மாற்றி பேசினால் நகைச்சுவையாக மாறிவிடும். அதேநேரம், சினிமாவில் அப்படி நடந்தால் பிரச்சனையில்லை. ஏனெனில், மீண்டும் அந்த காட்சியை எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: நான் தானே உன்ன வளர்த்தேன்..! எங்கு உடைந்தது தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பு.. இந்த படத்தில் தானாம்..?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து 2014ம் வருடம் வெளியான திரைப்படம் கத்தி. இப்படத்தில் விஜய்க்கு நண்பராக சதீஷும், ஜோடியாக சமந்தாவும் நடித்திருந்தனர். ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பிரச்சனையை உலகுக்கு சொல்வதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அதன்பின் விஜய் என்ன செய்து இந்த பிரச்சனையை வெளியே கொண்டு வருகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய் கொல்கத்தா சிறையில் இருக்க, அவரை போலவே இருக்கும் மற்றொரு விஜய் அவரின் இடத்திற்கு போய் பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்.

இதையும் படிங்க:: சாரி நான் நடிக்க மாட்டேன்!.. ஜிகர்தண்டா 2-வில் நடிக்க மறுத்த எஸ்.ஜே.சூர்யா..

ஆனால், விவசாயிகளின் பிரச்சனையையும், ஜீவாவின் நோக்கத்தையும் புரிந்துகொண்டு அவர் செய்ய நினைத்ததை இந்த விஜய் செய்து முடிப்பதுதான் கதை. முதன்முறையாக ஜீவா என நினைத்து மற்றொரு விஜயை வயதானவர்கள் தங்கியிருக்கும் இடத்தி அழைத்து போவார்கள்.

அப்போது அவரை பார்த்து ‘ஜீவா தம்பி எங்க போனீங்க?.. உங்களத்தான் நாள் முழுக்க தேடிக்கிட்டு இருந்தோம்’ என வயதான ஒருவர் சொல்ல வேண்டும். இதுதான் அவரின் வசனம். ஆனால் ‘விஜய் தம்பி நீங்க எங்க இங்க?’ என சொல்ல விஜயோ ‘ஷுட்டிங் வந்தோம்யா’ என சொல்ல படப்பிடிப்பில் எல்லோரும் குழுங்கி குழுங்கி சிரித்தார்களாம். அதன்பின் அரைமணி நேரம் கழித்து அந்த காட்சியை மறுபடி எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனர்..! மரியாதை கொடுக்காமல் சூர்யா செய்த செயல்.. என்னங்க இதெல்லாம்?!

google news
Continue Reading

More in Cinema News

To Top