பெரிய மனுஷன்யா.. வந்த வாய்ப்பை தவற விட்ட விஜய்! மீண்டும் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ரஜினி

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கும் விஜய் தற்போது அவரது மக்கள் இயக்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கூடிய சீக்கிரம் அவரது கட்சிக்கான சின்னம் என்ன என்பதும் தெரியவரும். இந்த நிலையில் விஜய்க்கும் ரஜினிக்கும் இருக்கும் அந்த போட்டா போட்டி இன்னும் நிலவி வருகின்றது. யார் சூப்பர் ஸ்டார் என்பதில் ஆரம்பித்த பிரச்சினை காக்கா கழுகு கதை வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தன. அதிலும் மாறி மாறி விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இணையத்தில் போட்டுக் கொண்ட சண்டைகள் மிகப்பெரிய பூகம்பமாக மாறியது.

இதையும் படிங்க: ச்சீ.. கருமம்.. ஆசனம் பேரே ஒரு மாதிரி இருக்கே!.. அமலா போல் உட்கார்ந்து இருக்க போஸை பார்த்தீங்களா!..

இதை யாராவது நிறுத்த மாட்டாங்களா? விஜய் அல்லது ரஜினி இருவரில் யாராவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கமாட்டார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நேற்று நடந்த லால்சலாம் இசை வெளியீட்டு விழா மேடையில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி. ஆனால் அதையும் ரசிகர்கள் விடவில்லை. ஒரு பெரிய மனுஷன். தானாக முன்வந்து இந்தளவுக்கு இறங்கி வந்து பேசுகிறார். விஜய்க்கு அந்த மனசு வரவில்லையே என்று கூறி வந்தார்கள்.

இதில் வந்த வாய்ப்பை தவறவிட்ட விஜய் என்ற ஹேஷ் டேக்கில் நேற்று ரஜினி பேசியதை விஜய் பேசியிருந்தால் எப்படி இருக்கும் என இணையத்தில் சில பதிவுகள் உலா வந்தன. அதாவது ‘எனக்கு 13 வயசா இருக்கும் போதே, தர்மத்தின் தலைவன் ஷூட்டிங்கில் ரஜினி சாரை பார்த்தேன், அவர் என்னை நல்லா படிச்சிட்டு சினிமாவுக்கு வா கண்ணா ன்னு சொன்னார். அவரை பார்த்து, அவர் முன்னால் நடித்து, நான் இன்று இந்த நிலையில் உங்கள் முன் நிற்கிறேன்.’

இதையும் படிங்க: ராஜ்கிரணுக்கு இப்படியொரு முகமா?.. ரஜினியையே அந்த விஷயத்தில் வீழ்த்தினாரா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்

‘நான் என்றுமே அவருக்கு போட்டி இல்லை, அவருக்கும் நான் போட்டி இல்லை. அவர் என்றுமே என்னோட well wisher தான், அதனால எங்களை வைத்து ரசிகர்கள் நீஙகள் சண்டை போடாதீர்கள்’ இப்படி விஜய் சொல்லியிருந்தால் கண்டிப்பாக மக்களே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் அதை லியோ மேடையில் தவறவிட்டார் விஜய்.

ஆனால் அதே லியோ மேடையில் விஜய்க்கு script எழுதி கொடுத்த புண்ணியவான், ‘சார், நீங்க காக்கா, கழுகுன்னு சொல்லிட்டு, ஓரு pause விட்டு, மைக்கை சுத்தி வாங்க, claps பிச்சுக்கும்னு’ சொல்லிக் கொடுத்து மேலும் பிரச்சினையை ஊதி பெருசாக்கி விட்டுட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: சும்மா இருந்தாலும் சொறிஞ்சு விடுறாங்களே!.. விஜய் ரசிகர்களை விடாமல் வம்பிழுக்கும் ரஜினி ஃபேன்ஸ்!..

 

Related Articles

Next Story