நீ என்ன சொல்றது? நான் என்ன கேட்குறது? விஜய் சேதுபதியின் ஆசைக்கு குறுக்கே நிற்கும் மகன்

Actor Vijaysethupathi: தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற அடைமொழியோடு இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ரசிகர்களிடம் எளிமையாகவும் சகஜமாகவும் பேசக் கூடியவர். பார்த்த சிறிது நேரத்திலேயே எளிதாக ஜெல் ஆகக் கூடியவர். அதனாலேயே இவருக்கு மக்கள் செல்வன் என்ற பெயர் வந்தது. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார்.

வாழ்வியலின் எதார்த்தத்தை மிகவும் எளிமையாக காட்டிய படமாக அந்த படம் அமைந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதில் விஜய் சேதுபதியின் நடிப்பும் மிகவும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இன்று ஒரு மாபெரும் ஆக்சன் ஹீரோவாக மாஸ் நடிகராக ஃபேன் இந்தியா நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் விஜய் சேதுபதி.

இதையும் படிங்க: 300 ரூபாய் சம்பளத்துக்காக உயிரை விட்ட நடிகர்! இவர் மட்டும் இல்லைனா அந்த கவுண்டமணி காமெடி எடுபடுமா?

இப்போது இவருக்கு போட்டியாக இவருடைய மகனும் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இவருடைய மகன் சூர்யா ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் முதன் முதலில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுதான் இவருக்கு அறிமுகப்படம். அதன் பிறகு மீண்டும் தந்தையுடன் சிந்துபாத் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்திலும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து இப்போது ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார் .ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி வரும் போனிக்ஸ் வீழான் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் சூர்யா சேதுபதி. ஆனால் இவர் ஹீரோவானது ஒரு விபத்து என விஜய் சேதுபதி பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: உன்னால நான் கெட்டேன்!.. அவனால நீ கெட்ட!.. என்னடா தனுஷ், சியான் விக்ரமுக்கு வந்த சோதனை!..

ஏனெனில் தன்னுடைய மகனை மியூசிக் சார்ந்த துறையில் பெரிய ஆளாக்க வேண்டும் என விரும்பினாராம் விஜய் சேதுபதி. அதனால் அவர் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே மியூசிக் டீச்சர் வச்சி பெரிய டார்ச்சர் எல்லாம் செய்ததாக விஜய் சேதுபதி கூறி இருக்கிறார் .அதுமட்டுமல்லாமல் பிரபல மியூஸிசியன் ஜஸ்டின் பிரபாகரனிடம் வேலைக்கும் சேர்த்து விட்டாராம். ஆனால் தன்னுடைய மகன் தேர்ந்தெடுத்தது நடிப்பை மட்டும் தான். அதனால் இப்போது நடிப்பில் ஆர்வம் அதிகமானதால் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார். இதுதான் அவருடைய சந்தோஷம் என ஒரு பதிவில் கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.

 

Related Articles

Next Story