அரசியல் எண்ட்ரியால் தான் இது நடக்கல.. விஜய் வைத்த தடா… கண்ட்ரோல் கண்ட்ரோல்!

Vijay Politics: விஜய் தற்போது அரசியல் எண்ட்ரியால் அவரின் திரை வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை செய்து இருக்கிறார். அப்படத்திற்காக முக்கியமான சில முடிவுகளையும் எடுத்து இருக்கிறாராம். இது குறித்து தற்போது கோலிவுட்டில் பேச்சுகள் தொடர்ச்சியாக அடிப்பட்டு வருகிறது.

விஜய் தற்போது லியோ படத்தினை முடித்துவிட்டு டூரில் இருக்கிறார். அவரின் அடுத்த படத்திற்கு தற்போது தளபதி68 எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். படத்தினை கல்பாத்தி எஸ்.அகோரம் சார்பில் அர்ச்சனா தயாரிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: ‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்து திடீர் மரணம்… இன்னும் எத்தன பேர காவு வாங்குமோ!…

இப்படத்தினை தொடர்ந்து அட்லீ விஜயை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தினை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த வாய்ப்பை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாருக்கே விஜய் கொடுத்து இருக்கிறார். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கிய சில காரணங்களும் இருக்கிறதாம்.

அரசியல் எண்ட்ரி கொடுக்க இருக்கும் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விட்டால் அது தனக்கு எதுவும் பிரச்னையாக அமைந்து விடுமோ என விஜய் தரப்பு நினைக்கிறதாம். இதனால் தான் தற்போது சன் பிக்சர்ஸுடன் இணைய வேண்டாம் என விஜய் கூறிவிட்டாராம்.

இதையும் படிங்க: அப்போ சினிமால உருப்புடுறது கஷ்டம்தான்!.. பால் நடிகை முதல் ஆனந்த நடிகை வரை அனுபவித்த வாரிசு நடிகர்!..

கொஞ்ச நாட்கள் கழித்து வேறு ஒரு கதையில் மீண்டும் இணையலாம் என விஜய் சொல்லியதாகவும் அதுவரை இந்த கூட்டணியில் படம் நடக்காது என கோலிவுட்டில் கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.

வரிசையாக விஜயிற்கும் தயாரிப்பு நிர்வாகத்துக்கும் லடாய் வந்து பிரச்னை நடந்து கொண்டே இருப்பது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே மகனை அறிமுகம் செய்து வைத்ததால் லைகா நிறுவனத்தின் மீதும் விஜய் கடுப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

 

Related Articles

Next Story