Connect with us

Cinema News

எனக்கு மட்டும் ஏன் அப்படி பண்ண?.. நெல்சனுக்கு போன் போட்டு மீண்டும் திட்டிய விஜய்.. என்ன ஆச்சு?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படக் காட்சிகளை பார்த்து விட்டு தளபதி விஜய் டைரக்ட்டா நெல்சனுக்கே போன் செய்து பேசியுள்ளதாக ஹாட் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் விஜய்யை தாக்கித் தான் பேசினார் என பலர் பற்ற வைத்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அந்த தொனியில் பேசவில்லை என்றும் சரத்குமார், சீமான் உள்ளிட்ட சிலருக்குத் தான் அவர் பதிலடி கொடுத்துள்ளார் என தெளிவான விளக்கமே விஜய்க்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து சென்று விட்டதாம்.

எப்போதுமே தலைவர் என கொண்டாடி வரும் நடிகர் விஜய் ஜெயிலர் படத்தின் காட்சிகளை பார்த்து விட்டு மனமார இயக்குநர் நெல்சனை பாராட்டியதோடு மட்டுமின்றி செல்லமாக திட்டியதாகவும் தகவல்கள் லீக் ஆகியுள்ளன.

நெல்சனை நம்பிய விஜய்:

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை மட்டுமே பார்த்து விட்டு, இயக்குநர் நெல்சனின் டார்க் காமெடி பிடித்துப் போய் எனக்கும் ஒரு படம் பண்ணுப்பா என விஜய் அப்பவே வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

டாக்டர் படத்தின் ரிசல்ட்டும் மிகப்பெரிய வெற்றிப்படம் என வந்த நிலையில், நெல்சனை முழுமையாக விஜய் நம்பிய நிலையில், பீஸ்ட் படத்தில் ஏகப்பட்ட எக்ஸ்பீரிமென்டுகளை செய்ய அனுமதி அளித்துள்ளார். அதனால், தான் அந்த ஜெட் ஃபைட்டு எல்லாம் வந்திருக்கிறது. ஆனால், கடைசியாக படம் வெளியான போது ட்ரோல் படமாக பீஸ்ட் மாற நடிகர் விஜய் அப்செட் ஆகி விட்டாராம்.

ஜெயிலர் பார்த்து ஹேப்பி: 

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்களை பலரும் திரித்து விஜய்க்கு எதிராகத்தான் ரஜினிகாந்த் பேசியுள்ளார் என அடித்து நொறுக்க அதையெல்லாம் கண்டுக்கவே இல்லையாம் தளபதி விஜய்.

சமீபத்தில், வெளியான ஜெயிலர் படத்தின் ஷோகேஸை பார்த்து விட்டு ரொம்ப நல்லா இருக்கே என ஃபீல் பண்ண தளபதி இயக்குநர் நெல்சனுக்கு உடனடியாக போன் செய்து சூப்பர் நெல்சன் கலக்கிட்டீங்க என வாழ்த்தியதாக செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் கூறியுள்ளார்.

நெல்சனை திட்டிய விஜய்: 

அதே நேரத்தில் நயன்தாரா, சிவகார்த்திகேயன், சூப்பர்ஸ்டாருக்கெல்லாம் நல்ல படத்தை கொடுத்து விட்டு எனக்கு மட்டும் ஏன் அப்படி பண்ண என செல்லமாக திட்டியிருக்கிறாராம்.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் பீஸ்ட் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என பேசியதையும் விஜய் பார்த்து விட்டு ஹேப்பி ஆகியுள்ளார் என்கின்றனர். அப்போ அந்த காக்கா vs கழுகு கதையெல்லாம் என்ன ஆச்சு என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சில் நிச்சயம் ரஜினிகாந்துக்கான பதிலடி இருக்காது என்றும் மாறாக இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விடுபவர்களுக்கு சவுக்கடி இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top