தயாரிப்பாளரிடம் 3 மடங்கு அதிகமாக சம்பளம் கேட்ட விஜயகாந்த்!. அட அந்த படத்துக்கா?!…

Published on: June 30, 2024
vijayakanth
---Advertisement---

விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தபோது அவருடன் வந்தவர் அவரின் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். அவருக்கு கதாசிரியர் ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, விஜயகாந்துக்கு எல்லாமுமாக அவர் மாறினார்.

விஜயகாந்துக்காக வாய்ப்பு கேட்டார். வாய்ப்பு கிடைத்து விஜயகாந்த் படங்களில் நடிக்க துவங்கிய பின் அவர் நடிக்கும் படங்களின் கதையை ராவுத்தரே தேர்ந்தெடுத்தார். ராவுத்தருக்கு கதை பிடிக்கவில்லை எனில் அவ்வளவுதான். விஜயகாந்தின் கால்ஷீட் வேண்டுமானால் ராவுத்தரிடம்தான் செல்ல வேண்டும்.

இதையும் படிங்க: இதனாலதான் இவர் காலில் நான் விழுந்தேன்!. நடிகரிடம் சொன்ன கேப்டன் விஜயகாந்த்!..

என்ன சம்பளம்?.. எத்தனை நாள் நடிப்பார்? அட்வான்ஸ் எவ்வளவு? என எல்லாவற்றையுமே ராவுத்தர்தான் முடிவு செய்வார். இப்படி விஜயகாந்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராவுத்தர்தான். அவர் சொன்னால் விஜயகாந்த் கேட்பார். அவர் எந்த படத்தில் நடிக்க சொல்கிறாரோ அந்த படத்தில் நடிப்பார்.

அப்படி ஒரு நம்பிக்கையும், நட்பும், புரிதலும் அவர்களுக்கு இடையே இருந்தது. முதலில் விஜயகாந்தை வைத்து படமெடுக்க தயங்கிய சில தயாரிப்பாளர்கள் ‘வைதேகி காத்திருந்தாள்’ ஹிட்டுக்கு பின் விஜயகாந்தை வைத்து படமெடுக்க போட்டி போட்டனர். இதில், கலைப்புலி தாணுவும் ஒருவர்.

அப்படித்தான் அவரின் தயாரிப்பில் கூலிக்காரன் படத்தில் விஜயகாந்த் நடித்தார். இது ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தாணு ‘விஜயாகந்தை வைத்து படமெடுக்க வேண்டும் என முடிவெடுத்து ராவுத்தரை போய் பார்த்து பேசினேன். அதிக சம்பளம் சொன்னால் நான் ஓடி விடுவேன் என நினைத்த அவர் விஜயகாந்த் அப்போது வாங்கி கொண்டிருந்த சம்பளத்தில் 3 மடங்கு அதிகமாக கேட்டார். நான் உடனே சம்மதம் சொன்னேன்.

அதோடு, ‘எப்போது அட்வான்ஸ் கொடுக்க வேண்டும்?’ என கேட்டேன். அவர் ஆடிப்போய்விட்டார். அதன்பின் கூலிக்காரன் படத்தில் விஜயகாந்த் நடித்தார். ரஜினியை வைத்தே அப்படத்தை எடுக்க ஆசைப்பட்டேன். ஆனால், அவர்தான் விஜயகாந்தை வைத்து எடுக்க சொன்னார்’ என கூறியிருந்தார் தாணு.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.