கேப்டன் பேரை சொன்னதும் kpy பாலாவுக்கு கிடைத்த பெரிய சப்போர்ட்! இனிமே சொல்லவா வேண்டும்?

KPY Bala: விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர் kpy பாலா. கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் அறிமுகமான kpy பாலா அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய தனித்துவமான காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். ஒல்லியான உடல்வாகை கொண்டதனால் பல பேரின் கிண்டலுக்கும் ஆளானார் kpy பாலா. இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் மக்களை சிரிக்க வைப்பதையே தன் முதல் எண்ணமாக கொண்டிருந்தார்.

அதன் விளைவு இன்று விஜய் டிவியில் டாப் காமெடி ஆர்ட்டிஸ்ட் என்றால் அது பாலாதான் என்றளவுக்கு உயர்ந்திருக்கிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார் kpy பாலா. சினிமா விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இவர்தான் பில்லர் என்றளவுக்கு மாறினார் kpy பாலா.

இதையும் படிங்க: மலையாள நடிகரை கரம் பிடிக்கும் டாடா புகழ் அபர்ணா தாஸ்… சத்தமில்லாமல் முடிச்சிட்டாங்களே!

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதன் மூலம் kpy பாலாவுக்கு ஒரு கணிசமான தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் kpy பாலாவுக்கு 5000 சம்பளம் என்றாலும் அதில் எதையும் தனக்கு கொள்ளாமல் இல்லாதவருக்கு கொடுத்து அழகு பார்த்து வந்தார்.

இன்று ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பல உதவிகளை செய்துவருகிறார். ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தருவது, ஊனமுற்றவர்களுக்கான உதவிகளை செய்வது போன்றவைகளை செய்து வருகிறார். அதனால் மக்கள் மத்தியில் ஒரு ரியல் சூப்பர் ஸ்டாராகவே மாறியிருக்கிறார் kpy பாலா.

இதையும் படிங்க: சிவாஜியின் நடிப்பு இப்படித்தான் இருக்கும்!.. இளம் நடிகர்கள் சொல்வது என்ன தெரியுமா?…

இந்த நிலையில் கேப்டன் மகனான விஜயபிரபாகரன் கலந்து கொண்ட ஒரு விழா மேடையில் kpy பாலாவும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது kpy பாலா பேசுகையில் நான் இந்தளவுக்கு தான தர்மம் செய்வதற்கு விதை போட்டவரே கேப்டன் தான். அவரின் இன்ஸ்ப்ரேஷனாலதான் நானும் பல உதவிகளை செய்து வருகிறேன் என கூறியிருந்தாராம். இதை கேட்டதும் விஜயபிரபாகரன் அப்பா பெயரை சொல்லி என்னை செண்டிமெண்டா டச் பண்ணீட்டீர்கள்.

அதனால் உங்களால் முடியாத பட்சத்தில் என்னிடம் வந்து கேளுங்கள். உங்களோடு சேர்ந்து நானும் உதவிகளை செய்ய காத்திருக்கிறேன் என கூறினாராம் .

இதையும் படிங்க: தயவு செஞ்சு அரண்மனை 4 பார்க்குறதுக்கு முன்னாடி அதை மட்டும் பண்ணாதீங்க!.. அலர்ட்டான சுந்தர். சி!..

 

Related Articles

Next Story