Kamal Vijayakanth: போகும் போது என்ன கொண்டு போகிறோம்.அதனால் இருக்கிற வரைக்கும் பிறருக்கு கொடுத்து நாமும் வாழவேண்டும் என்ற எண்ணம் இன்று ஒரு சில பேருக்குத்தான் இருக்கிறது. அதுவும் சினிமாவை பொறுத்தவரைக்கும் கோடிகளில் சம்பளம் வாங்கும் பல பெரிய முன்னனி நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை என்னதான் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
அதிலும் ஒரு சில நடிகர்கள் தான் செய்வது வெளியில் தெரியாதவாறு உதவிகளை செய்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக இருப்பவர் நடிகர் அஜித். அஜித் செய்த உதவி இதுவரை வெளியில் யாருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் விஜயகாந்த் தன் வாழ்நாள் வரைக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்து அதை பார்த்து வாழ்ந்தவர் விஜயகாந்த். தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான நடிகராகவும் இருந்தார்.
இதையும் படிங்க: ரஜினி வருஷத்துக்கு ஒரு படமாவது நடிக்க இவர்தான் காரணமாம்!… இப்படி எல்லாம் நடந்திருக்கா?
சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போகக் கூடியவர். எதையும் கறாராக கேட்டதே இல்லை. இந்த நிலையில் கமல் நற்பணி மன்றத்தில் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர் குணசீலன். அவர் ஒரு பேட்டியில் கமல் மற்றும் விஜயகாந்த் பற்றி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது முன்பெல்லாம் பேச்சுப் போட்டி நடக்குமாம். அந்த போட்டியில் வெற்றி பெறுவோர்க்கு அந்த நேரத்தில் 1000 ரூபாய் முதல் பரிசாக கொடுப்பார்களாம்.
ஆனால் அதை 10000 ரூபாயாக முதன் முதலில் மாற்றியவர் கமல் என்று மன்ற நிர்வாகி குணசீலன் கூறினார். அதுமட்டுமில்லாமல் கமல் பிறந்த நாள் சமயத்தில் இவரிடம் கமல் ஒரு லட்சம் கொடுத்து விடுவாராம். அதில் இல்லாதவர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ அதை செய்துவிடுவார்களாம். கிட்டத்தட்ட 18 வருடமாக இதை செய்தாராம்.
இதையும் படிங்க: ‘கூலி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய சூப்பர் ஸ்டார்
இவர்கள் செய்யும் உதவியை பார்த்து விஜயகாந்த் ‘யாருய்யா நீங்க? இப்படி செஞ்சிக்கிட்டு இருக்கீங்க’ என்று ஆச்சரியமாக கேட்டாராம். ஆனால் இப்போது எப்படி நடக்கிறது என தெரியவில்லை என்று அந்த மன்ற நிர்வாகி கூறினார். அவர் இப்போது அந்த மன்றத்தில் இருந்து விலகிவிட்டாராம்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…