Connect with us
archana

Biggboss Tamil 7

இதுக்கு அந்த பணப்பெட்டியை எடுத்துப் போயிருக்கலாம்! அர்ச்சனாவுக்கு கொடுத்த 50 லட்சம் என்னாச்சு?

VJ Archana: டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலேயே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். விஜய் டிவியில் டிஆர்பியை எகிற வைக்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்படுகிறது. ஏழு சீசன்கள் நிறைவடைந்து மக்களின் அமோக வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

நடந்து முடிந்த சீசனில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது ரசிகர்கள் அர்ச்சனா மீது வைத்திருந்த அளவுக்கதிகமான அன்பும் காதலும் தான் காரணம். அந்தளவுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் அர்ச்சனா. அதன் காரணமாகவேதான் அவர் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: தம்பி நம்ம சண்டைய அப்புறம் பாப்போம்!.. ‘ஜெயிலர் 2’வை ஹிட்டாக்க ரஜினி போடும் ஸ்கெட்ச்..

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் அர்ச்சனா அவர் இருந்த மன நிலையை பற்றியும் கூறினார். அதாவது கடைசி வாரத்தில் அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார்கள். அப்போது வந்த யாருமே அர்ச்சனாவிடம் சகஜமாக பேசவில்லையாம். அதுவே அர்ச்சனாவிற்கு மிகப்பெரிய வலியாக இருந்ததாம்.

இப்படி இருக்கும் என தெரிந்தால் போனவாரம் அந்த பணப்பெட்டியை தூக்கிட்டு போயிருக்கலாமே என்று நினைத்தாராம். அந்தளவுக்கு வந்த அனைவரும் இவரை ஒதுக்கி வைத்தே பார்த்தார்களாம். இருந்தாலும் மக்கள் கொடுத்த அன்பு என்னை யார் என நிரூபித்து விட்டது என்று அந்த பேட்டியில் கூறினார். மேலும் விஜய் வர்மாவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே பல காதல் மீம்ஸ்கள் இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் மணிரத்னம் – கமல்!.. அதிர வைக்கும் தக் லைவ் ஸ்பெஷல் வீடியோ..

அதைப் பற்றி பேசிய அர்ச்சனா காதல் பாடலை போட்டதற்கு பதிலாக அண்ணன் தங்கை பாடலை போட்டு மீம்ஸ் கிரியேட் பண்ணியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன் என கூறினார். ஏனெனில் வீட்டிற்குள் விஜயை ஒரு சகோதரனாகத்தான் பார்த்தாராம் அர்ச்சனா. அதையும் மீறி மக்கள் ஏன் இப்படி செய்தார்கள் என தெரியவில்லை என்றும் வேதனைப்பட்டார்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top