Connect with us
archana

Biggboss Tamil 7

டைட்டில் வின்னர் இல்லாம நடந்த சக்சஸ் பார்ட்டி! அர்ச்சனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

VJ Archana: கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்த பிக்பாஸ் ஃபினாலேவில் விஜே அர்ச்சனாதான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அர்ச்சனா வைல்ட் கார்ட் எண்டிரியாகத்தான் உள்ளே நுழைந்தார்.

ஆகவே அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த நாள்களை கருத்தில் கொண்டால் மொத்தமாக 70 நாள்கள்தான் இருக்கும். அதுவும் ஒரு மாதமாக எல்லா போட்டியாளர்களின் மன நிலையை அறிந்து கொண்டு முழுவதுமாக தெரிந்து கொண்டு உள்ளே வந்த அர்ச்சனாவுக்கு எப்படி டைட்டில் வின்னர் கொடுக்க போச்சு என முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களில் இருந்து ஒரு சில பேர் அர்ச்சனாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: பிரதீப் தப்பா பேசுனா மத்தவங்க மட்டும் என்ன ஒழுங்காவா பேசுனாங்க!… ரகசியத்தை உடைத்த தினேஷ்…

ஏன் ஃபினாலே நடந்து முடிந்ததுமே அங்கு இருந்து பல ரசிகர்கள் அர்ச்சனாவிற்கு எதிராக கத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் வைல்ட் கார்ட் எண்டிரியாக நுழைந்து டைட்டில் வின்னரை தட்டி சென்று புதிய வரலாறையும் படைத்திருக்கிறார் அர்ச்சனா.

இந்த நிலையில்  அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போதே தனது பி.ஆர்.ஓக்களை தயார் நிலையில் வைத்துவிட்டுதான் வந்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் அவரால் எந்த கண்டட்டும் இருந்ததாக தெரியவில்லை. வெளியில் அவரது பிஆர்ஓக்கள் செய்த வேலைதான் அர்ச்சனாவின் முழு வெற்றிக்கும் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: இப்படியெல்லாமா சீன் வைப்பாங்க! படம் பாக்கவே தோணல.. வெளிப்படையாக விமர்சித்த ஆர்ஜே பாலாஜி

இதனால் விஜய் டிவிக்கும் அர்ச்சனா மீது சிறிய வருத்தம் இருப்பதாகவெ தெரிகிறது. இந்த நிலையில்தான் ஃபினாலே முடிந்து அன்று இரவே ஷூட்டிங் எல்லாம் முடிந்தும் சக்சஸ் பார்ட்டி வைத்திருக்கிறார்கள். அதில் அர்ச்சனாவை தவிற மற்ற போட்டியாளர்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். அர்ச்சனா இந்த பார்ட்டியை தவறவிடவில்லை. அர்ச்சனாவை புறக்கணித்திருக்கிறார்கள் என்றுதான் வெளிவட்டாரங்களில் கூறப்படுகிறது.

அப்படியே பிஆர்ஓக்கள் செய்த வேலைதான் என்றாலும் ஊர்களில் இருக்கும் மக்களும் அர்ச்சனாவைதான் வின்னராக்கிப் பார்க்க ஆசைப்பட்டார்கள். அதனால் அர்ச்சனா மீது உண்மையிலேயே மக்கள் அதிகளவு அன்பை வைத்திருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: நாங்க செத்து அஞ்சு வருஷமாச்சு… கேப்டனின் அஞ்சலி நிகழ்ச்சியில் மன்சூர் உருக்கம்

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top