அந்த மாதிரி நேரத்துல கூட கோவிலுக்குப் போவேன்… தடாலடியாய் அப்பவே சொன்ன டிவி சீரியல் நடிகை!

by sankaran v |   ( Updated:2025-04-18 06:33:40  )
vj deepika
X

vj deepika

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்தவர் வி.ஜே.தீபிகா. உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் சீரியலில் இருந்து திடீரென விலகினார். பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

பரியேறும் பெருமாள் படத்தில் கயல் ஆனந்தியின் தோழியாக ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகத் தனது கலைப்பயணத்தைத் தொடங்கினார் விஜே.தீபிகா. அவர் சென்னைக்கு வந்து சீரியல் நடிகையாக படிப்படியாக முன்னேறினார். பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலம் ஆனார்.

ஐஸ்வர்யா அவ்வப்போது இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை வெளியிடுவார். அது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இவர் எனது பயணம் பாதியில் முடிந்தது. ஆனா இப்போ எங்கே முடிஞ்சதோ அங்கேயே ஒரு தொடக்கமாக வந்திருக்கு என்றும் சொல்கிறார். 3வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

நான் நான்வெஜ் சாப்பிட்டு கூட கோவிலுக்குப் போவேன். பீரியட்ஸ் நேரத்துல கூட கோவிலுக்குப் போவேன். பூஜை ரூமுக்கு போய் சாமி கும்பிடுவேன். எனக்கு என்னன்னா அவர் என்னோட அய்யனார். என்னை ஒதுக்க மாட்டாரு. எனக்கு உடம்பு சரியில்லன்னா அவர் என்னைப் பார்த்துப்பாரு. நானும் கடவுளும் நல்ல புரிதல்ல இருக்கோம். யாரும் என்னை அதை பண்ணாதே. இப்படி பண்ணாதேன்னு சொல்லாதீங்கன்னு அப்பவே சொன்னாராம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தீபிகா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மெகா தொடர்களில் முக்கியமானது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் நாலு பேரைச் சுற்றியே கதை. விறுவிறுப்பாகப் போனது. 2018ல் ஆரம்பித்த இந்தத் தொடர் 2023 வரை சுமார் 1348 எபிசோடுகள் நடந்து நிறைவுற்றது. தாய்க்குலங்களைப் பெரிதும் கவர்ந்து இழுத்தது. இந்தத் தொடரில் தான் விஜே.தீபிகா நடித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story