Connect with us

Cinema News

இனிமே என்ன கூப்பிடாதீங்க.! எனக்கு வேற வேலை இருக்கு.! பருத்திவீரனின் புது கதை.!

தற்போதைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அமீர் என்பவர் நல்ல நடிகராகவும் வடசென்னை படத்தில் ராஜனாகவும் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் என்று மட்டுமே தெரிந்திருக்கும்.  ஆனால், உண்மையில் அவர் ஓர் சிறந்த இயக்குனர் அவரது இயக்கத்தில் வெளியான முந்தைய திரைப்படங்கள் எடுத்து பார்த்தால் தெரியும் அவர் எவ்வளவு திறமையான இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில், மௌனம் பேசியதே, ராம் , பருத்திவீரன் பொன்ற தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை இயக்கியவர் அமீர் அதற்கடுத்து நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததால் தற்சமயம் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இருந்தாலும் அமீரிடம் ரசிகர்கள் சிறந்த படங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

இந்நிலையில், அவர் இயக்கத்தின் வெகு நாட்களாக கிடப்பில் இருக்கும் திரைப்படம் சந்தனத்தேவன். நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்கவுள்ள சந்தனத்தேவன் படம் ரொம்ப  நாட்களாக கிடப்பில் இருந்த இந்த படத்தை தற்போது இயக்குனர் அமீர் முழுவீச்சில் படமாக்க இயங்கி வருகிறார்.

இதையும் படியுங்களேன் …நாங்கலாம் என்ன சொம்பையா?… விஜய் சொன்ன வார்த்தையில் கடுப்பான அட்லீ, லோகேஷ், AR.முருகதாஸ்.!

 

தற்போது, நடிகர் ஆர்யாவும் தங்களுக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் உள்ளதை கூறி இந்த படத்தை தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதனால், தற்போது இயக்குனர் அமீர் மீண்டும் புத்துயிர் பெற்று சந்தனத்தேவன் மெருகேற்றி வருகிறார். இதனால் விரைவில் சந்தனத்தேவன் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என இயக்குனர் அமீர் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். என்ன நடக்குது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top