சூர்யா படங்களை ஓட விடாமல் செய்ய சதி நடக்குதா? எல்லாத்துக்கும் அதுதான் காரணமா?

actor surya
Surya: சூர்யாவுக்கு 13 வருஷமாக எந்த ஒரு படமும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. சூர்யாவின் படங்கள் ஓட விடாம இருக்க சதி நடக்குதா? என்ற கேள்விக்குப் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி பதில் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
சூர்யா கொஞ்ச பேச்சா பேசுனாரு. நீட்டுங்கறாரு. மும்மொழிக் கொள்கைங்கறாரு. அரசுக்கு எதிரா பல விஷயங்கள் பேசுறாரு. அப்படி பேசலாமா? அதனால தான் படம் ஓடலன்னு சொல்றாங்க. சூர்யாவுக்கு 13 வருஷமாக எந்த ஒரு படமும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதுக்குப் பெரும்பாலும் சொல்றது என்ன காரணமாகத்தான் உள்ளது. நடிகன் அரசியல் பேசலாமா? இப்படி எல்லாம் பேசுனா படம் ஓடுமா? நாங்க படத்தைப் பார்க்க விட மாட்டோம்னு சொல்றாங்க. இது உண்மையா?
அரசியல் பேசுனா படம் ஓடாதா? தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர் படங்கள்ல அரசியல் பேசுனாங்க. எம்ஜிஆர் தன்னை வளர்த்துக்கிட்டதே அரசியல் பேசனதனாலதான். எஸ்எஸ்ஆர்., கே.ஆர்.ராமசாமி, எம்ஆர்.ராதா, பேசுனாரு. என்எஸ்.கிருஷ்ணன் பேசாத அரசியல் கிடையாது.
எம்ஜிஆர், சிவாஜி அரசியல் பேசவில்லையா? அப்படிங்கறபோது ஒரு கலைஞனா சூர்யா அரசியல் பேசக்கூடாது. பேசுனா தப்புன்னு சொல்றது ரொம்ப மோசமான செயல். சூர்யா பேசுறது மக்களுக்கான அரசியல். ஒரு தனிப்பட்ட கட்சியின் அரசியல்னு சொல்றாங்க. ஆனா அது இல்லை.

சூர்யா படங்கள் ஏன் ஓடலை? கதைகளங்களுக்கான படங்களில் நடிக்கிறதுக்குப் பெரிய நாயகர்கள் பயப்படுறாங்க. இவங்க தொல்லை தாங்க முடியாம இருக்கு. போனா கொன்றுவாங்க போல இருக்குன்னு மக்களும் தியேட்டருக்கு வரப் பயப்படுறாங்க.
சினிமாவுக்குள்ள வேறொரு புரட்சி வரவேண்டிய காலகட்டத்தை நோக்கி தமிழ்சினிமா பயணிச்சிக்கிட்டு இருக்கு. நாங்க தான் படத்தை ஓடவிடல. சூர்யா இனி அவ்ளோதான்னு சிலர் பேசுறது வெற்றுப் புலம்பல். சிறப்பான கதையா இருந்தால் யாரு படமா இருந்தாலும் அதை ரசிப்பாங்க. சூர்யா மக்களுக்கான கலைஞன். அவர் இன்னும் களத்தைப் புரிஞ்சிக்கிட்டு நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் தேர்வு செய்து நடித்தாருன்னா அடுத்த படம் இன்னும் சிறப்பாக வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.