Connect with us

Cinema News

ரஜினிக்காக தொடர்ந்து அஜித்தை காலி செய்யும் லைகா… மீண்டும் தள்ளிப்போன விடாமுயற்சி?

Lyca: லைகா தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் உச்ச நடிகர்களின் படங்களை தயாரிக்க தொடங்கியதில் இருந்து சிக்கல் தான். அதிலும், லைகாவின் இந்த முடிவால் தற்போது அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது அஜித் என்று தான் சொல்ல வேண்டும்.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தினை தயாரிக்க இருப்பதாகவும் படத்தினை பெயரினையும் லைகா கடந்த வருடம் மே முதல் தேதியில் அறிவித்தது. ஆனால் அதன் பின்னர் எந்த வேலைகளும் தொடங்கப்படவில்லை. அஜித் நாடு நாடாக பைக்கில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க: படத்தோட கதை லஞ்சம் வாங்கக் கூடாது.. ஆனா படத்துக்காக நான் கொடுத்த லஞ்சம்! சமுத்திரக்கனி ஆவேசம்

ஒரு கட்டத்தில் லைகா அஜித் படத்தினை கைவிடும் நிலைமைக்கு வரை சென்றது. அந்த நேரத்தில் மனம் இறங்கி ஷூட்டிங்கிற்கு வந்தார் அஜித். ஆனால் மேப்பில் கூட கண்டுப்பிடிக்க முடியாதப்படியான ஒரு வித்தியாசன லொகேஷனுக்கு மொத்த டீமை அழைத்து சென்று ஷூட்டிங் வைக்க வேண்டும் என்றாராம். அதன்படி அஜர்பைனானில் படப்பிடிப்பு தொடங்கியது.

அங்கு தொடங்கியது பிரச்னை. ஏகப்பட்ட செலவுகள் கிடுக்குப்பிடி போடும் நிலைக்கு வந்தது லைகா. அந்த நேரத்தில் தான் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தினை தொடங்கியது. இது ரஜினி படத்திலும் பிரச்னை கொடுக்கும் விதமாக அமைந்தது. இதனால் தற்போது வேட்டையன் படத்தை முதலில் முடிக்க லைகா திட்டமிட்டு விட்டதாம். அஜித்தால் வந்த பிரச்னைக்கு அவரே பலியாகட்டும் என்கின்றனர்.

இதையும் படிங்க: உடனே எனக்கொரு யானை வேணும்!.. கொண்டு வாங்க!.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த சிவாஜி!..

அதன்படி வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் பாதியில் முடிய இருக்கிறதாம். அதன் பின்னர் விடாமுயற்சி ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தின் கடைசியில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் மட்டுமே முடிந்ததுள்ளது. அதுமட்டுமல்லாமல் விடாமுயற்சியை ஆகஸ்ட்டில் வெளியிட முதலில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்போது இருக்கும் நிலைமைக்கு தீபாவளிக்கு கூட விடாமுயற்சி ரிலீஸ் ஆவது சந்தேகமாகவே பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top