வடிவேலு சைக்கோன்னு எவன் சொன்னான்!.. இன்னைக்கு வரை கஞ்சி குடிக்கிறதே அவரால தான் – பாவா லட்சுமணன்!..

Published on: April 19, 2024
---Advertisement---

வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ளேன். மாயி படத்தில் முதலில் என்னை பார்த்துவிட்டு சிறுவனாக இருக்கிறானே அந்த கதாபாத்திரத்திற்கு எனக்கேட்டார். அதன் பின்னர் சரத்குமாரின் நாட்டாமை பட லுக்கில் அவர் முன் போய் நின்றதும் ஓகே நீயே பண்ணிடு என்றார். அதுதான் இன்றளவும் எனக்கு கஞ்சி ஊற்றுகிறது என வடிவேலு குறித்து பேசியுள்ளார் பாவா லட்சுமணன்.

தொடர்ந்து அவரிடம் எப்படியாவது வடிவேலு குறித்து நெகட்டிவான கருத்தை வாங்கி விட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் யூடியூப் சேனலின் தொகுப்பாளினி, நீங்க இப்படி சொல்றீங்க ஆனால் மற்ற காமெடி நடிகர்கள் எல்லாம் வடிவேலு ரொம்பவே மோசமானவர் என்றும் சைக்கோ என்றெல்லாம் சொல்றாங்களே என வாயை புடுங்கினார்.

இதையும் படிங்க: கலெக்‌ஷனை அள்ளுமா கவின் படம்!.. தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பாரா டாடா?.. ஸ்டார் ரிலீஸ் தேதி இதோ!..

ஆனால், பாவா லட்சுமணன் உடனடியாக வடிவேலு பற்றி தெரியாதவர்கள் தான் அவரை சைக்கோன்னுலாம் சொல்வாங்க. அவர் உண்மையாகவே பல துணை காமெடி நடிகர்களுக்கு சினிமா வாய்ப்பை வழங்கி நடிக்கவே தெரியாதவர்களுக்கும் நடிப்பை சொல்லிக் கொடுத்து பிரபலமாக்கி விடுவார்.

ஆரம்பத்தில் என்னை அவர் நடிக்க வேண்டாம் என்றும் சொல்லியிருந்தால், இந்நேரம் நானெல்லாம் சினிமா பக்கமே வந்திருக்க மாட்டேன். இன்னைக்கும் நான் கஞ்சி குடிக்க காரணமே வடிவேலு தான். என்னைக்குமே அவர் செய்த நன்றியை நான் மறக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இழுத்து மூடினாலும் எடுப்பா தெரியுது அழகு!.. ரேஷ்மாவை நாட்டுக்கட்ட என வர்ணிக்கும் ரசிகர்கள்!..

வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தனது படங்களை அவர்களை பயன்படுத்தி வந்தார். பல படங்களில் நடித்தும் பணத்தை சேர்த்து வைக்காமல் செலவு செய்து விட்டு உடல் நலத்தை குடி போதையால் கெடுத்துக் கொண்டு கடைசியில் வடிவேலு உதவி செய்யல என புலம்புவது எல்லாம் எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை என வடிவேலு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மாமன்னன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வடிவேலு அடுத்ததாக பகத் ஃபாசில் உடன் இணைந்து மாரிசன் படத்தில் நடித்து வருகிறார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.