Connect with us
suryah

Cinema News

லட்சியத்தை அடைய வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கும் எஸ்.ஜே.சூர்யா! ஏன் அவருக்கு திருமணம் ஆகலனு தெரியுமா?

சினிமாவில் தற்போது ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவே மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. அவருடைய ஆசையே இதுதான். எப்படியாவது சினிமாவில் தான் நிலையான இடத்தை அதுவும் ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணியே சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர்.

அவருடைய பள்ளி முடிப்பை முடித்த கையோடு கல்லூரி படிப்பையும் முடித்து சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னையிலேயே இருந்து வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தார். செலவுக்கு என்ன பண்றது என யோசிக்கையில்தான் ஒரு ஹோட்டலில் கேஷியராக வேலைக்கு சேர்ந்தார்.

இதையும் படிங்க : கூரையை பிச்சுக்கிட்டு கொடுத்தாலும் இந்த ஆசை மட்டும் அடங்காது! விடாமல் லோகேஷை டார்ச்சர் செய்யும் விஜய்சேதுபதி

வேலை நேரம் போக மீதமுள்ள நேரங்களில் இயக்குனர்களை சந்தித்து வாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருந்தார். அதன் விளைவுதான் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேரும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து உதவியாளராகவே இருந்தவர்க்குதான் திடீரென ஒரு வாய்ப்பு வந்தது.

ஆசை மற்றும் சுந்தர புருஷன் போன்ற படங்களில் அசிஸ்டெண்டாக வேலைபார்த்தார் எஸ்.ஜே.சூர்யா. அவர் முதன் முதலாக வாலி படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதுவும் அஜித்தை வைத்து மிகப்பெரிய ஹிட்டை கொடுத்ததனால் சினிமாவே இவரை திரும்பி பார்க்க வைத்தது.

அந்த வெற்றிக் களிப்போடு தொடர்ந்து விஜயுடன் இணைந்து மற்றுமொரு வெற்றியை பதிவு செய்தார். இருந்தாலும் இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தோம் என்ற இருமாப்பு எல்லாம் கொள்ளாமல் எப்படியாவது நடிகராக சாதிக்க வேண்டும் என படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் மக்களை அந்தளவுக்கு ஈர்க்கவில்லை.

இதையும் படிங்க: மதுரையில் லியோ ஆடியோ ரிலீசா?… ஆத்தி ஆளை விடுங்க.. வெளிநாட்டுக்கு மாத்துங்க… அந்தர்பல்டி அடித்த விஜய்

பிறகு தனது டிராக்கையே மாற்றினார். வில்லனாக அவதரித்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். இத்தனை போராட்டங்களை எதிர்கொண்டு இன்று ஒரு சிறந்த நடிகராக நம் கண்முன் நிற்கிறார் சூர்யா. ஆரம்பத்தில் கல்யாணம் என்ற பேச்சு வரும் போது இதுதான் அவர் மனதில் இருந்ததாம்.

ஒரு  நடிகராக எப்போது வெற்றியடைகிறேனோ அதன் பிறகு தான் கல்யாணம் என்று முடிவெடுத்திருந்தாராம். இப்போது லட்சியத்தில் வெற்றியடைந்த சூர்யா வாழ்க்கைத்துணையை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top