Connect with us
Vkanth2-vl

Cinema History

வடிவேலு மட்டும் மதுரை வந்தா வெட்டுறதுல தப்பே இல்ல… கொதித்தெழுந்த விஜயகாந்த் மேனேஜர்..

கேப்டன் விஜயகாந்தின் மேனேஜர் ராஜேந்திரன் விஜயகாந்த் பற்றிய பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றில் முக்கியமாக கேப்டனின் இறுதி அஞ்சலியில் பங்கேற்காத வடிவேலுவுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். அதுபற்றி பார்ப்போமா…

வடிவேலு ஒரு விஷப்பாம்பு. அவரு பத்திப் பேசக்கூடாது. அவரு குடும்பம். அவருக்குப் பணம் வரணும். அதை மட்டும் தான் பார்ப்பாரு. மக்களுக்கு ஒரு ஸ்பீச் கூட கொடுக்க மாட்டாரு. சர்க்கரை தேவன் படத்துல காமெடியா வர்றாரு வடிவேலு. மாற்றுத்துணி கிடையாது. இன்னைக்குப் போட்டா நாளைக்கு போடுறதுக்கு துணி கிடையாது. எல்லாமே கேப்டன் வாங்கிக் கொடுத்தது தான். 6 வேஷ்டி 6 சட்டை வாங்கிக் கொடுத்தாரு.

அவருக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்தது கேப்டன். இன்னைக்கு அவரு வரல. சினிமான்னா எல்லாரும் வரணும். நல்லதுக்கும், கெட்டதுக்கும் வரணும். பணத்தை மட்டும் பார்க்கக்கூடாது. வடிவேலு மட்டும் இதுவரைக்கும் ஒண்ணுமே பண்ணல. லட்டரோ, இல்லேன்னோ போன் பண்ணியோ அண்ணி இது மாதிரி வர முடிலன்னு சொல்லிருக்கலாம். ஏதாவது ஒரு பொய் சொல்லி பண்ணிருக்கலாம். அப்புறம் மக்கள் கொஞ்சம் மறந்து அவரை ஏத்துக்கிட்டு இருப்பாங்க.

இதையும் படிங்க… கொலைமிரட்டல் விட்ட தயாரிப்பாளர்.. பயந்து கண்ணீர்விட்ட நடிகர்… கேப்டன் செஞ்ச தரமான சம்பவம்..

இப்ப அது சாத்தியமில்ல. ஒருத்தர் மதுரையில இருந்து சொல்றாரு. நீ வாடா மதுரைக்கு உன்னை வெட்டுறேங்குறாரு. மதுரைக்காரங்கள் எல்லாம் அவ்ளோ பாசமானவங்க. வா மச்சான்…னு சொன்னா போதும். என்ன மாப்ளேன்னு கேட்பாங்க. அந்த உடனே சட்டையைக் கழட்டிருவாங்க. அந்த மாதிரி பாசத்துக்குக் கட்டுப்பட்டவங்க.

இதுல எப்படியோ தப்பித்தவறி வடிவேலு பொறந்து வந்து சினிமாவுக்கு வந்துட்டாரு. அதுவும் கேப்டன் மூலமா வரணும்னு இருந்துருக்கு. அந்த நன்றி மதுரைக்காரங்களுக்கு நிறைய பேருக்கு இருக்கு. ஆனா அவருக்கு அது இல்ல.

இதையும் படிங்க… இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இவ்வளவு கோடி செலவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்…

கேப்டனுக்கு இன்னைக்கு இவ்ளோ புகழ் இருக்குன்னா அதுக்குக் காரணம் அவரோட குணம். ஒருத்தர் தூங்கிக்கிட்டு இருந்தா அவரை எழுப்பாதேன்னு சொல்லுவாரு. அந்த இடத்துல காரை விட வேண்டியிருக்கு. எழுப்பித்தான் ஆகணும்னு டிரைவர் எழுப்பினாலும் அவருக்கு அடி தான். நான் தான் அவனை எழுப்ப வேணாம்னு சொன்னேன்லன்னு சொல்வாரு. அதே மாதிரி, அவரு வரும்போது சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா எழுந்து நிக்கக்கூடாது. சாப்பிடும்போது எழுந்திருக்கக்கூடாதுன்னு சொல்வாரு. உன்னை எழுந்துரிக்க சொன்னேனா…. உட்கார்றான்னு திட்டுவாரு.

google news
Continue Reading

More in Cinema History

To Top