குடிச்சு கூத்தடிக்கிறது ஒரு படமா? மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலம்

Published on: March 9, 2024
manju
---Advertisement---

Manjumel Boys: சில தினங்களாக தமிழ் சினிமா அதிக அளவு கொண்டாடிய படமாக இருப்பது மலையாளத்தில் வெளியான மஞ்சமெல் பாய்ஸ் திரைப்படம். சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கேரளாவை விட தமிழ் ரசிகர்களால் தான் அதிக அளவு கொண்டாடப்பட்டு வருகின்றன.

சொல்லப்போனால் கேரளாவை விட தமிழ்நாட்டில் தான் அதிக அளவு வசூலை அள்ளி இருக்கிறது. கடந்த வாரம் சனி ஞாயிறு ஆகிய இரு விடுமுறை தினங்களில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 850 ஸ்கிரீனில் வெளியாகி ஹவுஸ் ஃபுல்லாக ஓடி இருக்கிறது.

இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் மீது Metoo புகாரளித்த நடிகை.. பிரபலம் ஆகிட்டாலே பிரச்னை தானா?…

யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியை இந்தப் படம் பெற்றிருக்கிறது. ஒரு சாதாரண கதை தான். அந்த கதையை வைத்து ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிதம்பரம். தமிழ்நாட்டில் இந்த அளவு வரவேற்பை பெறுவதற்கு இன்னொரு காரணம் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் அமைந்த கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் அமைந்தது தான்.

கிளைமேக்ஸ் காட்சியில் அந்தப் பாடலை போட்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து விட்டது இந்தப் படம். அனைவரும் கொண்டாடுகின்ற படமாக இத்திரைப்படம் இருக்கையில் சமீபத்தில் வெளியான ஒரு பதிவு ரசிகர்களை பெறும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: குருநாதர் பாக்கியராஜ் மாதிரி படங்களை எடுக்கக்கூடாது!… இப்படியெல்லாம் யோசித்தாரா பார்த்திபன்!..

பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் இந்த படத்தை பற்றி அவருடைய கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை சமீபத்தில் தான் பார்த்தேன். அந்தப் படம் எனக்கு எரிச்சல் ஊட்டும் படமாகவே அமைந்தது.

கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பது என்றாலே குடித்துவிட்டு, சண்டை போட்டு, வாந்தி எடுத்து சாமானியர்களை நிலைகுலைய செய்து கும்மாளமிடுவது என்று காட்டி வருகிறது என்ற ஒரு கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.

இதையும் படிங்க:தேசிய விருது கிடைக்க வேண்டிய படம்.. மிஸ் பண்ண வருத்தத்தில் சிம்ரன்! இதுதான் காரணமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.