இப்படியும் செய்வாங்களா.?! விஜய்யின் மெகா ஹிட் இயக்குனருக்கு வேறு மாதிரியான சிக்கல்.!?

Published on: April 27, 2022
---Advertisement---

தளபதி விஜய்க்கு தொடர்ந்து  வேட்டைக்காரன், சுறா என பெரிய வரவேற்பு இல்லாத திரைப்படங்களாக நடித்து வந்த விஜய்க்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்டது. அப்போது அவருக்கு பெரிய வெற்றி , தமிழ் திரையுலகையே திரும்பி  பார்க்க வைத்த வெற்றி என்றால் அது துப்பாக்கி தான்.

அப்படி ஒரு வெற்றியை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் விஜயுடன் இணைந்து மீண்டும் ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமான கத்தி எனும் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் தான் முருகதாஸ். இவர் தனது படத்திற்கு மட்டுமில்லாமல் தனது உதவியாளர்களுக்கும் கதை எழுதி கொடுப்பார். அப்படி தான் மான் கராத்தே போன்ற படங்கள் வெளியாகி இருந்தன.

அதே போல் தற்போது முருகதாஸ் கதையில் உருவாகியுள்ள திரைப்படம் ராங்கி. இந்த படத்தை முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக இருந்து எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கி உள்ளார். திரிஷா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளதது.

இதையும் படியுங்களேன் – சூரிக்கு அல்வா கொடுத்த வெற்றிமாறன்.!? பெரிய ஹீரோ கிடைத்தால் இதுதான் நிலைமை.!

இந்த படம் தயாராகி வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த படத்தை வெளியிட லைகா ஆர்வம் காட்டவில்லையாம். காரணம் என்ன என்று விசாரிக்கையில், லைகா நிறுவனத்திற்கும் , தர்பார் சமயத்தில் முருகதாஸிற்கும் ஓர் உரசல் இருந்ததாம். இந்த படத்தின் கதை மிக நன்றாக இருக்கிறதாம்.

இந்த படம் வெளியானால் மீண்டும் முருகதாசிற்கு ஓர் நல்ல இயக்குனர் என்ற பெயர் வந்துவிடும் என லைகா நிறுவனம் வேண்டும் என்றே இந்த படத்தை தள்ளி போடுகிறது என ஒரு குரூப் சொல்லி கொண்டிருகிறது. இல்லை திர்ஷாவிற்கு இப்பொது நல்ல மார்க்கெட் இல்லை தற்போது பெரிய பெரிய படங்கள் ரிலீசாக உள்ளது. அதனால் பொறுமை காத்திருக்கிறார்களா என தெரியவில்லை.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment