
Cinema News
பொன்னியின் செல்வனில் கமல்ஹாசனா?? மணிரத்னம் குளோஸ்- வம்பிழுக்கும் பிரபல தயாரிப்பாளர்…
Published on
மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியான நிலையில் சக்கை போடு போட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிகின்றன.
இத்திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் சுமார் ரூ. 250 கோடிகளையும் தாண்டி வசூல் செய்து வருகிறது. இத்திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
“பொன்னியின் செல்வன்” நாவலை எம் ஜி ஆர், கமல்ஹாசன் என சினிமாவின் பல ஜாம்பவான்கள் திரைப்படமாக இயக்க முயன்றனர். ஆனால் யாருக்கும் அம்முயற்சி கைக்கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 2008 ஆம் ஆண்டு மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்கவேண்டும் என முடிவுசெய்தார்.
மேலும் விஜய்யை வந்தியதேவனாகவும், மகேஷ் பாபுவை அருண்மொழி வர்மனாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்துதான் கடந்த 2019 ஆம் ஆண்டு “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார் மணிரத்னம். உலகம் முழுவதும் கோவிட் தொற்று பரவிய நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. வெற்றிகரமாக படப்பிடிப்பும் முடிந்து இதன் முதல் பாகம் வெளியானது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, கமல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஜினி “இத்திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது” என கூறினார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ராஜனிடம் நிருபர் “பொன்னியின் செல்வனில் ரஜினி, கமல் ஆகியோர் நடித்திருந்தால் படம் இன்னும் நன்றாக பிசினஸ் ஆகியிருக்குமா?” என கேட்டார். அதற்கு பதிலளித்த ராஜன் “பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரஜினி, கமல் ஆகியோர் நடிக்கவில்லை. அவர்கள் நடிக்காமலேயே படம் நன்றாக பிசினஸ் ஆகிவிட்டது. ஒரு வேளை அவர்கள் நடித்திருந்தால் படம் தோல்வி கூட அடைந்திருக்கலாம். மேலும் இயக்குனருக்கு இந்தளவுக்கு சுதந்திரம் இருந்திருக்காது” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “இத்திரைப்படத்தில் ரஜினி அவர்கள் நடித்திருந்தால் இயக்குனர் சொல்வதை கேட்டு நடிப்பார். ஆனால் கமல்ஹாசன் நிறைய மாற்றங்கள் செய்திருப்பார். கதை சிதைவுக்கு கூட அவர் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்” எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...
இளம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Leo, coolie ஆகிய இரண்டு படங்களாலும் அருக்கு இருந்த...