பொன்னியின் செல்வனில் கமல்ஹாசனா?? மணிரத்னம் குளோஸ்- வம்பிழுக்கும் பிரபல தயாரிப்பாளர்…

Published on: October 9, 2022
---Advertisement---

மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியான நிலையில் சக்கை போடு போட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிகின்றன.

இத்திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் சுமார் ரூ. 250 கோடிகளையும் தாண்டி வசூல் செய்து வருகிறது. இத்திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

“பொன்னியின் செல்வன்” நாவலை எம் ஜி ஆர், கமல்ஹாசன் என சினிமாவின் பல ஜாம்பவான்கள் திரைப்படமாக இயக்க முயன்றனர். ஆனால் யாருக்கும் அம்முயற்சி கைக்கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 2008 ஆம் ஆண்டு மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்கவேண்டும் என முடிவுசெய்தார்.

மேலும் விஜய்யை வந்தியதேவனாகவும், மகேஷ் பாபுவை அருண்மொழி வர்மனாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்துதான் கடந்த 2019 ஆம் ஆண்டு “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார் மணிரத்னம். உலகம் முழுவதும் கோவிட் தொற்று பரவிய நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. வெற்றிகரமாக படப்பிடிப்பும் முடிந்து இதன் முதல் பாகம் வெளியானது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, கமல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஜினி “இத்திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது” என கூறினார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ராஜனிடம் நிருபர் “பொன்னியின் செல்வனில் ரஜினி, கமல் ஆகியோர் நடித்திருந்தால் படம் இன்னும் நன்றாக பிசினஸ் ஆகியிருக்குமா?” என கேட்டார்.   அதற்கு பதிலளித்த ராஜன் “பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரஜினி, கமல் ஆகியோர் நடிக்கவில்லை. அவர்கள் நடிக்காமலேயே படம் நன்றாக பிசினஸ் ஆகிவிட்டது. ஒரு வேளை அவர்கள் நடித்திருந்தால் படம் தோல்வி கூட அடைந்திருக்கலாம். மேலும் இயக்குனருக்கு இந்தளவுக்கு சுதந்திரம் இருந்திருக்காது” என கூறினார்.

மேலும் பேசிய அவர் “இத்திரைப்படத்தில் ரஜினி அவர்கள் நடித்திருந்தால் இயக்குனர் சொல்வதை கேட்டு நடிப்பார். ஆனால் கமல்ஹாசன் நிறைய மாற்றங்கள் செய்திருப்பார். கதை சிதைவுக்கு கூட அவர் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்” எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.