Connect with us

Cinema News

எம்.ஜிஆரிடம் செம டோஸ் வாங்கிய பிரபல இசையமைப்பாளர்… அய்யா மன்னிச்சிடுங்கனு கையெடுத்து கும்பிட்டதால் விட்டாராம்…

எம்.ஜி.ஆர் தேர்தல் களத்தில் கேட்ட ஒரு பாட்டால் மிகவும் கடுப்பாகி அந்த இசையமைப்பாளரையே கூப்பிட்டு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

கங்கை அமரன் இயக்குநராக அறிமுகமான படம் கோழி கூவுது. இப்படத்தின் தலைப்பை கொடுத்தவர் அவரது சகோதரர் இளையராஜா தானாம். இப்படத்தின் தான் நடிகை விஜி அறிமுகமானார். பிரபு, ஸ்மிதா, சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

gangai amaran

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் சாமுவேல் க்ரூப் பாடிய ஒரே திரைப்படப் பாடல் “அண்ணே அண்ணா”. இந்த பாடலில் வந்த ஒரு வரியால் தான் எம்.ஜி.ஆரே டென்சன் ஆகி விட்டாராம்.

இதையும் படிங்க: ராமராஜனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் இசைஞானி… பல வருட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கும் வெற்றி காம்போ!!

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ண என அந்த பாடலில் இருந்த ஒரு வரியை எடுத்து யாரோ போஸ்டர் அடித்துள்ளனர். அதை பார்த்த எம்.ஜி.ஆர் என்ன வரி யார் படம் எனக் கேட்டதும் கங்கை அமரன் பேரை சொல்லி இருக்கிறார்கள். உடனே அவரை அலுவலகத்திற்கு வரக்கூறி எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்திருக்கிறது.

gangai amaran

உடனே கிளம்பி சென்றவருக்கு என்ன இப்படியா பாட்டு வைப்பீங்க. என்ன அரசியல் விமர்சனம் எனக் கேட்டு இருக்கிறார். கங்கை அமரனோ பதறியடித்து அப்படியெல்லாம் இல்லை. அது சாதாரணமாக ராணுவ வீரர்கள் குறித்து எழுதப்பட்ட பாடல் தான். கண்டிப்பாக அதில் எந்தவித அரசியலும் இல்லை என்றாராம்.

அதைக்கேட்ட எம்.ஜி.ஆர் சரி எதோ தெரிஞ்ச ஆளா போய்ட்டீங்க பொழைச்சு போங்க எனக் கூறி அவரை விட்டாராம். இதை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கை அமரன் தெரிவித்து இருக்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top