ஜெயிலர் பக்கா உப்மா… அதுக்கு லியோவே பரவாயில்லை தான்… பிரபல விமர்சகரின் தடாலடி..!

Published on: October 21, 2023
---Advertisement---

Leo Movie: விஜயின் லியோ பட ரிலீசுக்கு பின்னர் மேலும் எக்கசக்கமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதில் தற்போது லியோ படம் கூட பரவாயில்லை. ஜெயிலர் ரொம்ப மோசம் என திரை விமர்சகர் கமெண்ட் மேலும் சலசலப்பை கிளப்பி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. சஞ்சய் தத், அர்ஜூன் வில்லனாக நடித்த இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளிவந்த சில ஷோக்களை தாண்டிய நிலையில் படம் தாறுமாறாக விமர்சனங்களை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..

இதில் ஒரு பக்கம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் வசூலை தாண்ட வேண்டும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் அந்த படத்தின் வசூல் 700 கோடி வரை நெருங்கி இருக்கிறது. லியோ வசூல் அதை தாண்டுமா என பலரிடத்திலும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

தமிழ் சினிமாவின் 1000 கோடி படமாக லியோ இருக்கும் என பேச்சுகள் இருந்த நிலையில், லோகேஷின் முதல் ப்ளாப் படமாக இருக்கிறது என கலாய்த்து வருகின்றனர். பல பிரபல விமர்சகர்களும் கூட லியோ கதையில் ஒன்னுமே இல்லை எனவும் பேசி வருகின்றனர். இந்நிலையில் ப்ளூசட்டை மாறன் ஜெயிலர் படத்தினை உப்புமா என கலாய்த்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ‘ஜெய்லர்’ படத்துல வேறெந்த வெங்காயமும் இல்ல! ஆனா எப்படி ஓடிச்சு? மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி

லியோ பட ஷூட்டிங்கிற்காவது அந்த குழு காஷ்மீர் சென்றது. ஆனால் ரஜினிகாந்த் ஷூட்டிங்கிற்கு அது கூட செய்யவில்லையே என கமெண்ட் தட்டி வருகிறார். இதில், அஜித் ரசிகர்கள் கமெண்ட்டை கூட பாத்துக்கலாம். ஆனா இந்த ரஜினி ரசிகர்கள் கமெண்ட் இருக்கே என பரப்பப்படும் புகைப்படத்தினை ஷேர் செய்த மாறன் ஜெயிலர் ரசிகர்கள் எல்லாம் பேசலாமா என்ற ரீதியில் கலாய்த்து இருக்கிறார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.